போலீசார் பிரித்து விடுவார்களோ எனகாதல் கணவருடன் மாணவி தற்கொலை
போலீசார் பிரித்து விடுவார்களோ எனகாதல் கணவருடன் மாணவி தற்கொலைவேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி அரும்பாக்கத்தை சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி மணிகண்டன், 27. இவர் மனைவி நிஜிதா, 24. கருத்து வேறுபாடால் தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி கோகிலா, 19, என்பவருக்கும், மணிகண்டனுக்கும், 'இன்ஸ்டா' மூலம் பழக்கமாகி காதலித்தனர். இருவரும் கடந்த, 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மாணவியின் வீட்டார் புகார் படி, நெல்லிக்குப்பம் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். இதனால் இருவரும் நேற்று காலை அப்பாச்சி பைக்கில், நெல்லிக்குப்பம் சென்றனர்.தங்களை பிரித்து விடுவார்கள் என பயத்தில், லத்தேரி அடுத்த பட்டியூர் ரயில் தண்டவாளம் அருகே சென்றபோது, இருவரும் கட்டியணைத்த படி, தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து கொண்டனர். அந்த வழியாக வந்த ரயில், அவர்கள் மீது ஏறி இறங்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இருவரும் ஒன்றாக கட்டியணைத்த படி கிடந்த சடலங்களை,ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மீட்டு, விசாரித்து வருகின்றனர்.