ராகவேந்திரா சுவாமி அவதார தின விழா
திண்டிவனம் : பொலக்குப்பத்தில், ராகவேந்திரா சுவாமியின் 430வது ஆண்டு அவதார தின விழா நடந்தது.திண்டிவனம் - செஞ்சி ரோடு, பொலக்குப்பத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா சுவாமிகோவில் தியான மண்டபத்தில், நேற்று பிற்பகல் 12:30 மணியளவில், ராகவேந்திரா சுவாமியின் 430வது ஆண்டு அவதார விழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.