ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா பேட்டி
செஞ்சி: ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் பட்டம் வினாடி-வினா போட்டி நடந்தது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து பதில் சொல் பரிசு வெல் வினாடி- வினா போட்டி நடந்தது. இதில் 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 குழுக்களாக பிரித்து இரண்டு சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.இதில் 9 ம் வகுப்பு மாணவர்கள் யோகேஷ், தினேஷ் முதலிடமும், 9ம் வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணா, காமேஷ் 2ம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.தலைமையாசிரியர் எட்வின் ஜெயகுமார் வரவேற்றார். ஊராட்சி தலைவர் முத்தம்மாள் சேகர் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், ஆரோக்கியராஜ், ஒதியத்துார் ஊராட்சி தலைவர் ஹரி, ஆசிரியர் அய்யாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். உதவி தலைமையாசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.