மாஜி படை வீரர்கள் குறைகேட்புக் கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். இதில், முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் பங்கேற்கலாம். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர், குடும்பம் ஆகியோர் தங்களின் கோரிக்கையை இரு பிரதிகளில் தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி அடையாள அட்டை நகலோடு நேரில் சமர்பிக்க வேண்டும். மேலும், முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்றோடு வர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.