குறைதீர் நாள் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், பொது மக்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய அலுவலர்கள், அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தினார்.நேற்றைய கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் கடனுதவி, கலைஞரின் கனவு இல்லம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 688 மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்ட முக்கிய துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.