47 ஆண்டுகளை கடந்து முதன்மைபள்ளியாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்
கடந்த 1977ஆம் ஆண்டு 30 மாணவர்களுடன் தாளாளர் சண்முகம், அவர்களால் ரெட்டணையில் துவங்கப்பட்டு முதன்மை செயலாளர் வனஜா சண்முகம் மற்றும் செயலாளர், நிர்வாக இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பால் இன்று இரண் டு பள்ளிகளிலும் சுமார் 2,500 மாணவ, மாணவியர்களைக் கொண்டு சிறந்த பள்ளியாக திகழ்கிறது.கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும், கடந்த 10 ஆண்டுகளாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது.கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறையிலும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டத்திலும் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு உலகதரம் வாய்ந்த கல்வி அளித்திட கடந்த 6 ஆண்டுகளாக கிரீன் பாரலடஸ் சிபிஎஸ்இ.,மேல்நிலைப்பள்ளி மாநில மற்றும் மத்திய அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. மத்திய அரசின் அங்கீகார எண் .1931204. கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் சிஐஏஏ நிறுவனம், இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பள்ளிகளாக 200 பள்ளிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்தது.அதில், மாவட்டத்தில் ஒரே பள்ளியாக கிரீன் பாரடைஸ் பள்ளிக்கு மட்டும் இந்த விருது வழங்கப்பட்டது.திண்டிவனம் வட்டத்திலேயே நவீன குளிர்சாதன வசதியுடன் கலந்தாய்வு கூடம், கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ், மழலையர், மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கொண்டசிபிஎஸ்இ., பள்ளி. கிரீன் பாரடைஸ் சிபிஎஸ்இ., பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், அனைத்து வகையான இசை வகுப்புகளும் சிறந்த முறையில் நடைபெறுகிறது.இது குறித்து பள்ளி தாளாளர் சண்முகம், முதன்மை செயலாளர் வனஜா சண்முகம் ஆகியோர் கூறியதாவது;மாணவர்களுக்கு நல்ஒழுக்கத்தை வளர்க்கும் வவகையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், திருவருட்பா வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வு வைக்கப்படுகிறது.விவசாய குடும்பத்தில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மேல்நிலை மாணவர்களுக்கு இலவச கல்வி, கட்டண சலுகை உள்ளிட்ட தவணைகள் கென்னடி கல்வி குழுமத்தால் வழங்கப்படுகிறது.எம் பள்ளிக்கு 2021ம் ஆண்டு தமிழக அரசு மற்றும் விஐடி., பல்ககலைக்கழம் இணணந்து சிறந்த கல்வியாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. தற்போது விஜயதசமி அட்மிஷன் நடைபெறுகிறது. பல்வேறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவராகவும், பொறியாளராகவும், ஆசிரியராகவும், காவல்துறை அதிகாரியாகவும், அரசு மற்றும் தனியார் துறையில் பல்வேறு இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலும் சிறந்த குடிமகன்களாக விளங்குகின்றனர் என்றனர்.