முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.