உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம்

அரசு கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். அரசியல் அறிவியல் துறை தலைவர் சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கினார். இதில், நாட்டு நலப்பணி திட்டத்திற்கு மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைந்து, அவர்கள் துாய்மை பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அருணாச்சலம் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி