சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டிவனம்: திண்டிவனத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 38வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், மேம்பாலத்தில் கீழ் உள்ள பஸ் நிலையம், நகராட்சி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் எமதர்மன் வேடம் அணிந்து வந்தவர், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.