மேலும் செய்திகள்
சிவகாசி அருகே 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
06-Oct-2024
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த பெருவளூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் 1.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கோட்டீஸ்வரர் சுவாமி கோவில் திருமண மண்டபத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, தரமாகவும், விரைவாகவும் பணிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், பெருமாள், ஊராட்சி தலைவர் கந்தவேல், கோவில் மேலாளர் மணி உட்பட பலர் உடனிருந்தனர்.
06-Oct-2024