உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு

விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு

விழுப்புரம்; டாடா ஏஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரை சேர்ந்தவர் கதிரவன், 31; இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து கஞ்சனுாருக்கு சென்றார். பூத்தமேடு பகுதியில் சென்றபோது எதிரில் திருப்பச்சாவடிமேட்டை சேர்ந்த பச்சையப்பன், 48; என்பவர் ஓட்டிவந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், பச்சையப்பன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ