மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
05-Jun-2025
திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று மயிலம் பெரும்பாக்கம் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து பல்சர் பைக்கில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் 17 மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், மதுபாட்டில் கடத்தி வந்தது, செய்யூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 23; என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
05-Jun-2025