உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது பஸ் மோதல் வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதல் வாலிபர் பலி

திண்டிவனம்: பைக் மீது பஸ் மோதிய தில் வாலிபர் இறந்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மனோஜ் குமார், 25; பெரம்பலுார், சொக்க நாதபுரத்தை சேர்ந்தவர் சங்கமலை மகன் வினோத், 24; இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திட்டக்குடிக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.அன்று இரவு 7:30 மணிக்கு திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மனோஜ்குமார் இறந்தார்.விபத்து குறித்து ஒலக் கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ