உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குத்தகைக்கு கேட்க ஆட்கள் வராததால் மா மரங்களை பராமரிக்காத விவசாயிகள்

குத்தகைக்கு கேட்க ஆட்கள் வராததால் மா மரங்களை பராமரிக்காத விவசாயிகள்

ராஜபாளையம்; ராஜபாளையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிப்படை விலையில்லாமல் குத்தகை கேட்க ஆட்கள் வராததால் மா மரங்களை மருந்து அடிக்காமல் பராமரிக்காமல் விட்டு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விளையும் மா வகைகளில் சப்பட்டை, பஞ்சவர்ணம் வகை மாம்பழங்களுக்கு தேவை அதிகம்.தொடர் பராமரிப்பு, தண்ணீர் தேவை குறைந்த மா விவசாயம் மலை தொடரை ஒட்டிய ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நடந்து வருகிறது.கடந்த மூன்று ஆண்டுகளாக, கொரோனா, பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் அதிகரித்து பருவம் தவறிய மழையினால் மாங்காய்களில் 'வங்கு' பிரச்சனை காரணமாக விலையின்றி மரங்களிலேயே காய்கள் பறிக்காமல் விடும் சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் மா குத்தகை விவசாயிகள் இடையே கேள்வி இல்லாததால் ஒரு வருடத்திற்கு அடிக்க வேண்டிய தொடர் மருந்து பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மா மரங்களில் பூ பூப்பது குறைந்துள்ளது.இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர்: பராமரிப்பு குறைவு, தகுந்த விலை, தொடர் சந்தை தேவை காரணமாக மா விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்தகை எடுத்த விவசாயிகள் கட்டுபடியாகாத நிலையை கூறி தற்போது கேட்பாரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் அறிவித்தபடி இப்பகுதியில் மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தியிருந்தால் நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை