உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்

கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அல்லிக்குளத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 23. இவரது கணவர் பீமாராஜ், 30. திருமணம் முடித்து அல்லிக்குளத்தில் வசித்தனர். பீமராஜ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார்.மத்தியசேனையை சேர்ந்தவர் ராஜபாண்டி, 27; திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். உறவினரான ராஜபாண்டியுடன் நாகலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. நேற்று காரியாபட்டியில் உள்ள வங்கிக்கு நாகலட்சுமி, அவரது ஒரு வயது மகன், உறவினர் பவித்ரா ஆகியோர் வந்தனர். அங்கு வந்த ராஜபாண்டி மூவரையும் டூ - வீலரில் எஸ். கல்லுப்பட்டி பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு குழந்தையையும், பவித்ராவையும் சாலையில் இறக்கிவிட்டு, நாகலட்சுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.பின்னர், ராஜபாண்டி மட்டும் டூ - வீலரில் தனியாக வேகமாக சென்றதை பார்த்த பவித்ரா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு நாகலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். காரியாபட்டி போலீசார் நாகலட்சுமியின் உடலை மீட்டு, ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை