வைக்கோல் படப்பில் தீ
நரிக்குடி: நரிக்குடி உவர்புளியங்குளத்தைச் சேர்ந்த சண்முகம், கால்நடைகள் வளர்த்து வருகிறார். தீவனத்திற்காக ஊர் அருகே வைக்கோல் படப்பு போட்டுள்ளார். அதன் மின் வழித்தடம் மேலே உள்ளது. நேற்று மாலை லேசான காற்று, மழை பெய்தது. இதில் தாழ்வாக சென்ற மின் வயர் காற்றுக்கு ஒன்றோடு ஒன்று உரசி தீ பிழம்பு ஏற்பட்டு, வைக்கோல் படப்பில் விழுந்ததில் எரிந்து நாசமானது.