| ADDED : ஜூன் 23, 2024 03:26 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வுக்கு தயராகும் தேர்வர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை மாதிரி தேர்வுகள் நடக்கிறது.அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 நடக்கிறது. இதற்கு தயாராகும் தேர்வுகளுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஜூன் 24 (நாளை), 27, ஜூலை 2, 5 ஆகிய தேதிகளில் மாதிரி தேர்வுகள் நடக்கிறது.இத்தேர்வில் பங்கேற்க வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் https://forms.gle/pYLMnf9T38E3DZJB8 என்ற GOOFLE FORM - ஐ பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வர வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.