அண் ணா நகரில் 50 ஆண்டாக குடிநீர் வினியோக ம் இல்லை குடியிருப்புவாசிகள் அவதி
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 25 வது வார்டு அண்ணா நகரில் 50 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி மாநகராட்சி 25 வது வார்டு அண்ணா காலனியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்பகுதியில் இதுவரையிலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் இல்லை. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு புழக்கத்திற்கான தண்ணீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் மேல்நிலைத் தொட்டி கட்டப்படாத நிலையில் இதுவரையிலும் அந்த தண்ணீரும் வினியோகம் செய்யவில்லை. இந்நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. குடிநீர் வாகனம் வரும் போதெல்லாம் சண்டை. சச்சரவு ஏற்படுகின்றது. மேலும் குடிநீரும் பற்றாக்குறையாக இருப்பதால் இப்பகுதியினர் விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர். எனவே மாநகராட்சி சார்பில் குழாய் குழாய் பதித்து மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.