| ADDED : அக் 19, 2025 06:12 AM
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் மாவட்ட அளவிலான இளம் நுகர்வோருக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் உதயசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய நீதிபதி சக்கரபாணி, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பால்பாண்டி, சிவகாசி ஆர்.டி.ஓ.,பாலாஜி ,மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன், தொழிலாளர்நலத்துறை உதவி ஆய்வாளர் துர்கா, காளீஸ்வரி கல்லுாரி முதல்வர் பாலமுருகன், பதிவு பெற்ற நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சாமுவேல்மனோகரன்,அழகு சுந்தரம் பேசினர். ஏற்பாடுகளை குடிமைபொருள் வழங்கல் தாசில்தார்கள் அருளானந்தம், ஆனந்தராஜ், சிவகாசி வட்டவழங்கல் அலுவலர் கோதாண்டராமன் செய்தனர்.