உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவை கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன் துவக்கி வைத்தார். விழாவினை கல்லுாரி முதல்வர் சாரதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் சந்திரசேகர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 738 இளநிலை, 175 முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கல்லுாரி பரிபாலன சபைத் தலைவர் பழனிச்சாமி, உபத் தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, கல்லுாரிப் பொருளாளர் சக்திபாபு, கல்லுாரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல், கல்லுாரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்