மேலும் செய்திகள்
ஜோசப் கலை கல்லுாரியில் மாணவர்கள் கலாச்சார போட்டி
10-Jun-2026
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை , அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.முதல்வர் தில்லை நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார். நகைச்சுவை பேச்சாளர் முத்துமுருகன் பேசினார். சாம்சங் நிறுவனத்தின் சார்பில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வென்ற மாணவி சரண்யாவிற்கு பாராட்டப்பட்டார். புதிய மாணவர்களுக்கு கல்லூரியின் கல்வித்தரம், கட்டுப்பாடு, முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கப் பட்டது. கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், பிஎட்., கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன், போக்குவரத்து செயலாளர் விக்னேஷ், கல்லூரி இயக்குனர் பாரதிமுருகன் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பவுர்ணா நன்றி கூறினார்.
10-Jun-2026