ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. திட்ட அதிகாரி செல்வம் வரவேற்றார். முன்னாள் மாணவரும், ராம்கோ பொறியியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரியுமான ராமநாதன் பேசினார். திட்ட அதிகாரி அருஞ்சுனைக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் விக்னேஷ்வரன், பார்த்திபன், மகாலட்சுமி, சிவஜோதி செய்தனர்.