உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சத்துணவு ஊழியர்கள் மறியல் 

 சத்துணவு ஊழியர்கள் மறியல் 

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 281 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் செய்தனர். சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்மாவட்டத் தலைவர் பாலம்மாள் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குவது, குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு செல்லும் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற281 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ