போலீஸ் செய்திகள்
பேன்சி ரக பட்டாசு திருட்டுசாத்துார்: ஆலங்குளம் எட்டக்காப்பட்டி பாலாஜி பயர் ஒர்க்சில் வைக்கப்பட்டிருந்த 240 ஷாட் 70 பீஸ் பேன்சி ரக பட்டாசுகள் திருட்டு போயின. நேற்று முன்தினம் இரவுபட்டாசு ஆலைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ 1,92,500 மதிப்புள்ள பட்டாசுகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்குசாத்துார்: வெம்பக்கோட்டை சமூக விரிவாக்க அலுவலர் ஆனந்த ஜோதி, 59. அம்மையார் பட்டியில் வசிக்கும் சிறுமியிடம் விசாரித்த போது, 16 வயது ஆன சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த புருஷோத்தமனுக்கு 32, அவரது தந்தை சிவபால் ஜெக், மாமியார் சிவகாமி ,சிறுமியின் தந்தை கந்தசாமி, தாயார் வீரலட்சுமி ஆகியோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. சமூக விரிவாக்க அலுவலர் ஆனந்த ஜோதி போலீசில் புகார் செய்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் 5 பேர் மீது குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இயந்திரத்தில் சிக்கி கால் முறிவுசிவகாசி: சிவகாசி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் யாக்கோபு 33. இவர் ஞானகிரி ரோட்டில் உள்ள பிரேம் குமாருக்கு சொந்தமான காகித பெட்டி தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிக்கப்படும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால்கள் இயந்திரத்தில் சிக்கி முறிவு ஏற்பட்டது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி மாயம்சாத்துார்: சாத்துார் பங்களாத் தெருவை சேர்ந்தவர் ரம்ஜான் பேகம், 41.இவரது 15 வயது மகள் மாலை 5:30 மணிக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் மாயம்சாத்துார்: வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 47. இவரது மூத்த மகள் அன்னலட்சுமி 24, 12 கிராம் நகை அணிந்திருந்தார். மாலை 5:15 மணிக்கு அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் அடைக்கலத்துடன் செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என அவரது தங்கை காவியலட்சுமியின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு மாயமானார். வெம்பக் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பெயின்டர் தற்கொலைவிருதுநகர்: விருதுநகர் அருகே கம்மாபட்டியை சேர்ந்த பெயின்டர் பாலமுருகன், 45, இவர் வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரித்துவருகின்றனர்.