உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் விபத்து இரு அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் விபத்து இரு அறைகள் தரைமட்டம்

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரு அறைகள் சேதமடைந்தன . விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பெத்துலுபட்டியில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான ஞானவேல் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு, 90 அறைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று மதியம், 3:30 மணிக்கு பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிப்பில், தொழிலாளர்கள் ஈடுபட்ட போது, ஓர் அறையில் மருந்துக்கலவையில் ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டவுடன் தொழிலாளர்கள், அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் இரு அறைகள் சேதமடைந்தன. சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ