| ADDED : ஜன 22, 2024 04:32 AM
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் ஆராய்ச்சி அகாடமியும், எத்தியோப்பியா, அடிஸ்அபாபாவில் உள்ள ராடா கல்லுாரியும் இணைந்து ஆராய்ச்சி நெறிமுறைகள் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் டிராபிக்கல் மைக்காலஜி, சென்னை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாபத் சூர்யநாராயணன் ஆராய்ச்சி நெறிமுறைகள் சிக்கல்கள், ஆராய்ச்சித்துறையில் கருத்துத்திருட்டு குறித்து பேசினார். ஆங்கில உதவிப்பேராசிரியர் விண்மயில், ஆராய்ச்சி மையத் தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளியல் துறைத் தலைவர் வைதேகி நன்றி கூறினார்.