மேலும் செய்திகள்
பவித்திரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காததால் அவஸ்தை
26-May-2025
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மிதிலைகுளத்தை சேர்ந்த முருகேஸ்வரி, 33, வங்கியில் அடமான வைத்திருந்த தன் நகையை மீட்டு, அருப்புக்கோட்டையிலிருந்து மே 9 அன்று பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்ற போது அவருடைய நகை திருடு போனது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்தப் பகுதி சிசிடிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். அதில் கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த பாலாத்தாள், 45, சந்தேகப்படும்படியாக பஸ் ஸ்டாப்பில் அங்கும், இங்கும் அலைவதுடன், பஸ்சில் ஏறி இறங்குவது தெரிய வந்தது. அவரை காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-May-2025