எடியூரப்பாவிற்கு நிபந்தனை ஜாமின்
பெங்களுரூ: நில மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. நீர்ப்பாசன திட்டம் மற்றும் பணமோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொரடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த மனு மீது கோர்ட் எடியூரப்பாவிற்கு ரூ.1லட்சம் உத்தரவாத பத்திரம் அளிக்கப்பட்டதன் பேரில் 10 நாட்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது.