பால் பொருட்கள் விற்பனை ரூ.80 லட்சம் வருவாய்
சென்னை:கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் பொருட்களை விற்பனை செய்ததால், ஆவினுக்கு கூடுதலாக 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.ஆவின் வாயிலாக பால் மட்டுமின்றி, 230 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக, மாதம் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்து வருகிறது. ஆவினுக்கு பால் வழங்குவதற்காக, கிராமம், ஒன்றியம், மாவட்ட அளவில் பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் விற்பனையை தவிர, அவற்றுக்கு மற்ற வருமானம் இல்லை. இதனால், கூட்டுறவு சங்கங்கள் தவித்து வந்தன. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில், பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் வாயிலாக, கூட்டுறவு சங்கங்களுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, ஆவினுக்கும் ஒரே மாதத்தில் கூடுதலாக, 80 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் பொருட்கள் மற்றும் பண்டிகை கால இனிப்புகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.