சம்மன் வந்ததா: தமன்னா மறுப்பு
சென்னை : 'கிரிப்டோ கரன்சி' மோசடி தொடர்பாக, புதுச்சேரியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில், அந்நிறுவனத்தினர் நடத்திய விளம்பர நிகழ்ச்சியில், நடிகையர் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கும், 'சம்மன்' அனுப்பி, போலீசார் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.இதை நடிகை தமன்னா மறுத்துள்ளார். 'இதில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.