உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு குண்டாஸ்

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு குண்டாஸ்

துாத்துக்குடி: துாத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 44. நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி. இவர், ரோச் பூங்கா அருகில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக தென்பாகம் போலீசார், அவரை மே 3ல் கைது செய்தனர். பாஸ்கரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், கைதான பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவின் படி, தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், குண்டர் சட்டத்தில் பாஸ்கரை நேற்று கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை