வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நேரடியாக சென்று பெயர் சேர்க்க முடியாதவன் நான் எனவே வோட்டர் ஹெல்ப் லைனில் சேர்க்க முயற்சி செய்தேன் ஆனால் முடியல இது வெறும் கண் துடைப்பு நாடகம்
எஸ் ஐ ஆர் பணியால் கைக்கு மேல் கிடைத்த பலன் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதுதான்
வேண்டுமென்றே பலரது பெயரும் தெரிந்தே விடப்பட்டது. எனது நண்பர் ஒருவருடைய பெயர் விடுபட்டது. எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். எனது உறவினர் பெயர் விடுபட்டது. அவரும் என்ன செய்வது என்று கேட்டார். அலுவலகம் சென்று கேட்கவும் என்று கூறினேன். அவர் அலுவலகம் சென்று கேட்ட போது, இங்கே அங்கே என்று இழுத்தடித்தனர். பிறகு அவர்களே கூறியது " இப்போது கொடுக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்து நடக்கும் முகாமில் நீங்கள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்து விடுங்கள்" அதற்கான சேர்க்கை உடனே தொடங்கும் என்று கூறினார்கள். வேலையை ஒழுங்காகச் செய்யாமல் பெயரை நீக்கிவிட்டு, மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? நானும் எனது பிஎல்ஓவை மீண்டும் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு வரவழைத்து விண்ணப்பத்தை கொடுத்தேன். முகாம் நடப்பதை விளம்பரப்படுத்தவில்லை. இப்போது கூட நாளையும் மறுநாளும் முகாம் நடக்கப் போகிறது. எந்த விளம்பரமும் இல்லை. கட்சிக்காரர்கள் மூலம் விவரம் சொல்லப்பட்டு கட்சிக்காரர்கள் அறிந்துள்ளனர். பொது மக்களுக்குத் தெரியாது. விடுபட்டவர்கள் பேசட்டும் என்று அதிகாரிகள் அலட்சியமாக வேலை செய்கிறார்கள். அதனால் வந்தது இப்போது மீண்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். இதில் தேர்தல் துறையை குறை கூறுவார்கள் பாருங்கள்.