வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அப்படியே எல்லா அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அவர்கள் உத்தமபுத்திரர்கள் என்று சான்றிதழ் வாங்க உத்தரவிட்டால் நல்லது அது நேர்மையான அரசாக சட்டமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது
அதேபோல சரியா ஆட்சி செய்யாத, செய்யத்தெரியாத இந்த திமுக அரசையும் டிஸ்மிஸ் செய்யலாமே... ,
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதை முன்மாதிரியாக கொண்டு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
பாலியல் குற்றவாளி ஆசிரியருக்கு தண்டனை கொடுப்பது வேலையிலிருந்து நீக்குவது சரி, அனால் அவரது சான்றிதழ்களை ரத்து செய்தால் அவருக்கு தண்டனை முடிந்தபிறகு வேறெங்கும் வேலை கிடைக்காது, அப்படியெனில் வெளியில் வந்தவுடன் வாழ்வதற்கு அவர் திருட்டு தொழில்தான் ஈடுபடமுடியும்.. ஒரு குற்றத்துத்து இதனை தண்டனை எதற்கு .... ஜெயிலில் போடுவதும் மட்டும் போதுமே
இந்த உத்தரவு நீதி மன்றத்தில் செல்லாது. வேலை நீக்கம் சரி. ஆனால் கல்வி தகுதியை ரத்து செய்ய முடியாது. அந்த கல்வி தகுதியை பெற தவறான வழியில் சென்று இருந்தால் உதாரணமாக ஆள் மாறாட்டம், போலி சான்றிதழ் என்று இருந்தால் தான் சான்றிதழை ரத்து செய்ய முடியும்.
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்: 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம். 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும், ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாகப் போட்டியிடலாம். 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம். 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும். ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், ஊனமுற்றவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு கட்டளையிடலாம். அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம். 6. ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையறையும் உண்டு. ஆனால் ஒரு எம். எல். ஏ, எம்.பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும், இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
உண்மை வெள்ளையன் எழுதிய சட்டத்தின் லக்னத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் நன்றி
எதிர்கால தேர்தல் பட்டாசு
அப்போ அந்த சாரு மீது என்ன நடவடிக்கை, கட்சி கொடி கட்டி பெண்களை விரட்டிய காமுகர்களுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லிடுங்க தமிழக அரசே, இல்லை என்றால் நீங்க அவர்களை பாதுகாப்பது தெள்ள தெளிவாக ஆசிரியர்களுக்கு புரிந்து விடும்
இது போஸ்கொ சட்டத்தில் கைதானவர்களில் ஒரு சதம்கூட இருக்காது ...இதை விட நூறு மடங்கு வெளியில் தெரியாதது .அதிகாரத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஆசிரியர்கள், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனராம் ...இந்த ஆசிரியர் மொத்தமும் திராவிடனுங்க லஞ்சத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள்.. பள்ளி கல்வி தமிழ் நாட்டில் இனி தேறாது ...
யார் அந்த சார் ....