உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. சிறப்பு ரயில்களில், பக்தர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பயணிக்கும்போது, விளக்கு மற்றும் கற்பூரங்களை ஏற்றி வைத்து வழிபடுவதை, தவிர்க்க வேண்டும். இந்திய ரயில்வே சட்டத்தின்படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள், காஸ் சிலிண்டர், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது. கற்பூரம், விளக்கு என, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, ரயில்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவர். அந்த வகையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை, பயணியர் எடுத்துச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகளை பற்ற வைக்கும் நபர்கள் குறித்து, சக பயணியர் உடனே டிக்கெட் பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, 139 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venugopal S
டிச 03, 2025 12:26

ரயில்வே துறை மத்திய பாஜக அரசின் கீழ் வருவதால்,பாஜகவும் .... கட்சி என்று கூறலாமா?


வாய்மையே வெல்லும்
டிச 03, 2025 10:54

அரபி பொய்யர்கள் இங்கு ஹிந்துக்களுக்கு சிண்டுமுடியும் வேலையை செய்ய முற்படுகிறார்கள்.. அன்னாரை வெச்சி செய்யவும். நம்முடைய ஒற்றுமை மிக முக்கியம். கயவர்களை விரட்டி அடிப்போம்


Diraviam s
டிச 03, 2025 10:50

ஏன் ரயில் வண்டியில் ஏறும்போதே சோதனை செய்யமுடியதா .. புகார் யார் கொடுப்பார்கள் ? ஏன் அரசாங்கம் புகார் கொடுப்பவர்களை மட்டும் நம்பி உள்ளது ? இந்த காலத்தில் புகார் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏது ?


N Annamalai
டிச 03, 2025 07:03

அது போல் ரயில் நிலையத்தில் ரயில் உள்ளே எச்சல் துப்ப கூடாது .கழிவறை சென்றால் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற சட்டங்கள் போடலாம் .இதை platform டிவி களில் விளம்பரப்படுத்தலாம் .டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வடநாட்டில் உத்தரவு போடலாம் .ரயில் ஓடும் பொது குப்பை போடாக கூடாது .குப்பை தொட்டியில் போட வேண்டும் .சுத்தம் சுகாதாரம் என்று மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரலாம் .


Sekhar
டிச 03, 2025 07:00

புகை பிடிப்பது மட்டும் சரியா???


D.Ambujavalli
டிச 03, 2025 06:22

பஜனை, நாம சங்கீர்த்தனம், பாடல்கள் இவற்றை செய்து வழிபட்டால் தெய்வம் திருப்தி அடைந்துவிடுமே பாதுகாப்பு கருதி கற்பூரம், தீபம் ஏற்றால் செய்யும் பூஜைகளும் தெய்வத்துக்கு உகப்பானவையே


ஜெய்ஹிந்த்புரம்
டிச 03, 2025 05:14

இந்துக்களே இந்து விரோத ரயில்வேயை புறக்கணியுங்கள்.


visu
டிச 03, 2025 05:54

நீ கோவில் ல மலை தீபம் ஏற்றுவதை எதிர்த்து மனு போடுறது ஹிந்து விரோதமான செயல் இங்க பாதுகாப்புகாக கற்பூரம் ஏத்தக்கூடாது சொல்லுறாங்க இதை பற்றி பேச உனக்கு தகுதி இருக்கா


N Sasikumar Yadhav
டிச 03, 2025 06:22

இந்துக்களின் மீது உங்க அக்கறை தேவையில்லை . நீங்க வழக்கம்போல இந்துமத துரோக திமுகவுக்கு சொம்படித்து கொண்டே உங்க மதரசா கல்வியை படியுங்க


vivek
டிச 03, 2025 07:51

திராவிட சொம்பு


வாய்மையே வெல்லும்
டிச 03, 2025 10:35

உங்களோட வேலையை தீவிரவாதிகளிடம் கரிசனம் காட்டும் இடத்தோட நிறுத்திக்கோங்க, அதுக்கு தான் உங்களை இறைவன் படைத்தான். ஹிந்துக்களிடம் சிண்டுமுடியற வேலை .. இங்கு வேணாம் ..


Priyan Vadanad
டிச 03, 2025 05:13

அதெப்படி. இது அராஜகம். மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்.


vivek
டிச 03, 2025 07:50

தற்குறி என்று தெரியுமே


Srinivasan Narasimhan
டிச 03, 2025 05:11

இது சரிதான் எதை எதொ எங்கே செயியனுமோ அங்கே மட்டும் செயய்யனும். பாதுகாப்பு முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை