உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துட்டேன்: குஷ்புவின் அடுத்த குறி என்ன?

மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துட்டேன்: குஷ்புவின் அடுத்த குறி என்ன?

சென்னை: தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நடிகை குஷ்பு, மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68h9vz36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடிகையும், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர், குழந்தைகள் நல ஆணைய உறுப்பினராக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஆக.,14) திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குஷ்பு விளக்கம்

ராஜினாமா குறித்து குஷ்பு அளித்த விளக்கம்: அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.,வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ., உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

பின்னணி

தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்ததாக குஷ்பு நேற்று கூறினாலும், கடந்த ஜூன் 28ம் தேதியே தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு முன்னதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ), 'தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக இருப்பவர் அரசியல் கட்சி உறுப்பினராக இருக்கலாமா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணையம், 'அது பற்றி எந்த தகவலும் இல்லை' எனத் தெரிவித்துள்ளது. கேள்வி கேட்ட கபில் என்பவர், 'தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதுபற்றி மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன்' என்றார். இந்த ஆர்டிஐ கேள்வியும் குஷ்புவின் ராஜினாமாவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் பதவி

இதற்கிடையே தமிழக பா.ஜ., தலைவராக உள்ள அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் ஆக.,28ம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பா.ஜ., தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காகவே தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், நேராக சென்னை கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எப்படியாயினும், அண்ணாமலை வெளிநாடு செல்வது உறுதியானால் இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

அரசியல் பயணம்

* திரைப்பட நடிகையாக இருந்த குஷ்பு 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலில் கால் பதித்தார்.* பின்னர், 2014ல் திமுக.,வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.* சுமார் 6 ஆண்டுகளாக காங்.,கில் இருந்து வந்த குஷ்பு, 2020-ம் ஆண்டு இறுதியில், அவர் அதற்கு முன்னர் பங்கெடுத்த அரசியல் கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட பா.ஜ.,-வில் ஐக்கியமானார்.* 2021ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை தழுவினார்.* பின்னர், தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி அவருக்கு கிடைத்தது.* நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.* தேர்தல் நேரத்தில் உடல்நிலையை காரணம் காட்டி பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி இருந்தார். தேர்தலுக்கு பிறகும் கட்சி பணிகளில் நாட்டமின்றி ஒதுங்கி இருந்து வருகிறார்.* தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rajathi Rajan
ஆக 23, 2024 11:38

அடுத்த குறி???


paulson wesly
ஆக 16, 2024 09:53

... ஒரு ஆளு....


rama adhavan
ஆக 15, 2024 22:43

2026இல் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி என நினைக்கிறேன். அதற்கு இது அஸ்திவாரம்.


Rama handran CV
ஆக 15, 2024 18:11

தயவுசெய்து கற்பு நெறி வழூவாத ஒருவரை நியமனம் செய்யுங்கள்.


venugopal s
ஆக 15, 2024 17:12

அடுத்த குறி நேராக முதல்வர் பதவி தானே?


God yes Godyes
ஆக 15, 2024 15:36

ஜெயலலிதா விட்டு சென்ற இடத்தை ஒரு நாள் இவர் நிரப்பு வார்.


Training Coordinator
ஆக 17, 2024 07:31

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை


Krishnamoorthy Perumal
ஆக 15, 2024 15:04

கொள்ளை அடித்ததில் 10% மட்டுமே திரும்ப வந்துள்ளது


Jai
ஆக 15, 2024 13:42

பாஜகவில் மகளிர் அணியில் பிரபலங்கள் அதிகமாகிவிட்டனர், வானதி விஜயதாரணி குஷ்பூ என்று போட்டி அதிகமாகிவிட்டது. மூன்று பேரும் திறமையானவர்கள், தீவிரமாக இறங்கி பாஜகவின் ஓட்டு சதவிகிதத்தை அதிகரித்தால் மூவரும் பெரிய இடத்தையும் பெறலாம் பாஜகவிற்கு அதிகாரமும் பெற்றுத்தரலாம். இப்படி ஒரு வாய்ப்பு மற்ற கட்சிகளான திமுகவில் நிச்சயம் இல்லை. திமுகவில் கனிமொழியை தாண்டி எந்த மகளிரும் முன்னுக்கு வர முடியாது. அதிமுகாவிலும் சீனியர் மகளிர் உள்ளனர்.


Premanathan Sambandam
ஆக 15, 2024 13:27

ரொம்ப நாளா செய்தியில் வரவில்லை. மக்கள் மறந்து விடக்கூடாது அதான் இப்போ வராங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 12:44

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை .... இருந்தாலும் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் இரண்டாமிடம் பிடித்தது ..... அண்ணாமலையின் இடத்துக்கு இந்த அம்மையார் வந்தால் மத்திய பாஜகவுக்கு திமுகவினர் நன்றி சொல்வார்கள் ..... காரணம் அம்மையாரின் திமிர்ப்பேச்சு .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை