உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி!

சைக்கிளில் வரும் எளிமையான நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

நீதிபதி பி.கே.சிவகுமார்,53, சொந்த ஊர் நாமக்கல். இவர் சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக் கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங் களில் பணியாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாவட்ட 5 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். நீதிபதி சிவகுமார் மிக எளிமையானவர், நேர்மையானவர்.தினந்தோறும் நீதிமன்றத்திற்கு சைக்களில் வருவதை வழக்கமாக கொண்டவர். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வரும் இவர், மதியம் நீதிமன்ற ஊழியர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டவர். நீதிமன்ற வளாகத்தில் தனியாக நடந்து செல்வார். இவருக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்ப மாட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 08, 2026 11:07

எந்த உயர்ந்த பிரச்னை உள்ள வழக்குகளை கையாளமாட்டார் என்று சொல்ல தோன்றுகிறது. வாதி பிரதிவாதி இருவருக்கும் சரியான தீர்ப்பு என்கிற நிலைமை வந்தால் இவருக்கு பாதுகாப்பு தேவை.


Lax Shiva
ஜூலை 07, 2026 17:13

இவர் நமக்கு ஒருஎடுத்துக்காட்டு அல்ல ஏனென்றால்நாம் நீதிபதியாக முடியாதுஅதனால் இவரை பள்ளி மாணவர்களுக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் எடுத்துக்காட்டாகஎளிமையானவாழ்கைக்கு முன்னோடியாக இருக்க அவர்களுக்குஇவரைப் பற்றிபாடம்சொல்லிக் கொடுங்கள் அவர்களுக்கு


Ameer Ali
ஜூலை 07, 2026 16:02

ஜஸ்டிஸ் சீனிவாசன் 1981 உயர் நீதிமன்றம்.வந்தவாசியில் கருணாநிதி அய்யா.இப்போது இவர்.கண்டிப்பாய் மழை பொழியும்.


Ameer Ali
ஜூலை 07, 2026 15:13

1987ல் ஜஸ்டிஸ் சீனிவாசன் . வந்தவாசி யில் கருணாநிதி அய்யா அவர்கள்.இப்போது இவர்.நிச்சயம் மழை பெய்யும்.


Suppan
ஜூலை 07, 2026 16:00

ஆம். ஜஸ்டிஸ் சீனிவாசன் குடிநீர் கூட வீட்டிலிருந்துதான் எடுத்து வருவார்.


V RAMASWAMY
ஜூலை 07, 2026 14:46

முடிந்தவர்கள் பின்பற்றினால், பெட்ரோல் செலவு மிச்சம், வாகனங்களினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.


Perumal Pillai
ஜூலை 07, 2026 14:34

நேர்மையான நீதிபதி , நேர்மையான கலெக்டர், நேர்மையான போலீஸ் . இதெல்லாம் ஒருபுறம் அழகாக இருந்தாலும் மறுபுறம் அந்த டிபார்ட்மென்ட் - ன் அவலச்சனத்தை காட்டுகிறது .


Barakat Ali
ஜூலை 07, 2026 14:27

இவரும் இருக்கிறார் .... நீதிபதி வர்மா போன்றவர்களும் இருக்கிறார்கள் .....


V S Venkataramani
ஜூலை 07, 2026 13:13

Good. This is the ning of the end of colonial mentality. All beaureacrats, judges and ministers including CMs and PM should follow this. After all, they are all public servants. That is, getting their salary and enjoying all other perks from the revenue collected from Public


Perumal Pillai
ஜூலை 07, 2026 12:51

செங்கல்பட்டு கோர்ட் வளாகத்தில் வைத்து ஒருவன் " ஒதுங்குங்கள் ஒதுங்குங்கள்" கூவிக்கொண்டே வந்தான் . எதோ பாம்புதான் புகுந்து விட்டதோ என நினைத்தோம் . பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு பூலோக கடவுள் பூமியில் நடப்பதற்கு space உருவாக்கி கொடுப்பதற்கு மக்களை விலகி செல்வதற்காக அவ்வாறு கூவியுள்ளான் என்பது .


Mohamed Hussain
ஜூலை 07, 2026 12:44

இன்னோரு அப்துல்கலாம்