உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்கவுன்டர் பேச்சால் சிக்கிய ஏ.சி.,: ஐகோர்ட் போட்ட தடையால் தப்பினார்

என்கவுன்டர் பேச்சால் சிக்கிய ஏ.சி.,: ஐகோர்ட் போட்ட தடையால் தப்பினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை திருவொற்றியூர் காவல் உதவி கமிஷனர் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் சென்றார். ரவுடியின் மனைவியிடம், 'உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும். கத்தியை எடுத்து கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்' என, எச்சரிக்கை விடுத்தார்.இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, உதவி கமிஷனரின் பேச்சு குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணையின் போது, உதவி கமிஷனர் இளங்கோவன் ஆஜரானார்.இதையடுத்து, உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கடந்த 7ல் அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி கமிஷனர் இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் வழக்கறிஞர் எம்.சினேகா ஆஜராகி, ''நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, உதவி கமிஷனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை, மாநகர போலீஸ் கமிஷனர், வரும் 14ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த 7ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு, நீதிபதிகள் தடை விதித்தனர்.இம்மனுவுக்கு ஆணையம் பதிலளிக்கும்படி கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vijai
அக் 10, 2024 13:10

மனித உரிமை கழகம் ஒழிக


தமிழன்
அக் 12, 2024 16:17

திமுக ஆட்சி பொறுப்பில் ஏற்றபோதே அது ஒழிந்து விட்டதே..


राजा
அக் 10, 2024 11:40

இந்த மனித உரிமை கழகம் மற்ற விஷயங்களில் ஏன் தலையிடுவதில்லை. மோடியை பீஸ் பீசாக ஆக்கி விடுவேன் என்று பேசிய அன்பரசன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள தைரியம் உள்ளதா. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தினம்தோறும் மோடியை பசை பாடுகிறார் அவரை விசாரிக்க தைரியம் உள்ளதா. குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசும் வீரமணி மற்றும் அவர்களுடைய அடிமைகளை தட்டிக் கேட்க தைரியம் உள்ளதா. ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் கொடுக்க வேண்டும் இதில் என்ன தவறு. போலீசார் தங்களுடைய கடமையை செய்யவிடாமல் தடுத்ததற்காக மனித உரிமை கழகத்தின் மீது வழக்கு தொடுத்து கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து இந்த மனித உரிமை கழகம் குரல் கொடுப்பதில்லை. ரவுடிகளுக்கு ஆதரவளித்து பேசி அவர்களை ஊக்குவிக்கும் இந்த மனித உரிமை கழகத்தை உடனடியாக தூக்கி எறிய வேண்டும்.


KavikumarRam
அக் 10, 2024 10:53

காவல்துறையினர் இனிமேல் இந்த மாதிரி ரவுடிகள் வீடுகளுக்கு போகும்போது பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக்கிட்டு போய் அவங்க வீட்ல உக்காந்து கொஞ்சி பேசிட்டு வரவும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 10, 2024 09:51

இதுதான் பிரச்சனை இங்கே. ரவுடிகளுக்கு பாதிப்பு என்றால் மனித உரிமை ஆணையமும் நீதிமன்றமும் முட்டுக்கொடுக்க வந்துவிடுகிறார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகளை கவனிப்பதில்லை. காரணம் அவர்கள் சொகுசாக போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதால் மக்களின் பிரச்சனைகள் புரிவதில்லை. மனிதனுக்குத்தான் மனித உரிமையே தவிர மனித போர்வையில் இருக்கும் மிருகங்களுக்கு அல்ல என்பதை யார் இந்த மக்களுக்கு புரிய வைப்பது?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 09:36

ரவுடிகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மனித உரிமை .... உரிமை எதுவும் இல்லீங்களா ????


தமிழன்
அக் 10, 2024 10:07

அதிகாரிகள் செய்வது நியாயமா


தமிழன்
அக் 10, 2024 10:08

ரவுடிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கினால் பிரச்சினை யாருக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்..


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 09:22

சமூக விரோதிகள் அதிகம் பிரச்னை செய்யாமல் சாதாரணமாகப் பிழைப்பை பார்த்துக்கொண்டு இருக்கும் வரை, கட்டிங் / மாமூல் ஒழுங்காக வந்துகொண்டிருக்கும் வரை அவர்களுடன் அரசியல்வியாதிகளுக்குப் புரிதல் இருக்கும் ...... ஈகோ பிரச்னை / பலான மேட்டர் மூலம் தகராறு / மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வருவது போன்ற காரணங்களால் பிரச்னை ஏற்பட்டால் கட்டிங் / மாமூல் பாதிக்கப்படுகிறது ..... உடனே மக்களை மடைமாற்ற அவங்க பாஷையிலே பேசுவோம் ன்னு ஸ்டேட்மென்ட் கொடுக்குறது .... இதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு தெர்மா ????


karunamoorthi Karuna
அக் 10, 2024 08:50

இந்த அதிகாரியை வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை பிடிக்க அல்லது என்கவுண்டர் செய்யும் வேலையை கொடுத்தால் ஒரு முடிவு கிடைக்கும்


தத்வமசி
அக் 10, 2024 08:16

மனித உரிமைக் கழகம் என்பது ரவுடிகளுக்கும், தேச விரோத சக்திகளுக்கும் தான் உள்ளது போல தெரிகிறது.


Kanns
அக் 10, 2024 08:14

Sack these AntiPeople PoliceBiased Judges & for Not Acting Against Unlawful Police Murders But Encouraging Police Murders


விவசாயி
அக் 10, 2024 08:05

காவல்துறை இனிமேல் எந்த ரவுடியையும் எச்சரிக்கை பண்ணாதீங்க, அதுக்கு பதிலா அவனுங்களுக்கு ஆரத்தி எடுக்கலாமா மனித உரிமை ஆணையம்? கொலை செய்வதை தொழிலாக இருப்பவர்களை என்கவுண்டர் செய்தால் தான் நல்லது இதனால மனித உரிமைக்கு என்ன இழப்பு என்று தெரியவில்லையே? !


சமீபத்திய செய்தி