உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம்

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம்

ஈரோடு: இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டை சிதறாமல் பெற, தி.மு.க.,வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் நேரடி சந்திப்பில் இறங்கிய நிலையில், அ.தி.மு.க., வலுவிழக்காமல் தடுக்க பழனிசாமி வழிகாட்ட கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உட்பட பல கட்சிகள் புறக்கணித்ததுடன், தங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என வழிகாட்ட தவறியுள்ளனர்.தேர்தலில், 46 பேர் போட்டியிட்டாலும், தி.மு.க., - நா.த.க., கட்சிகள் மட்டுமே வாக்காளர்களை ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க.,வுக்கு இணையான ஓட்டு வைத்துள்ள அ.தி.மு.க., ஓட்டை சிந்தாமல் பெற, தி.மு.க., அத்தனை பணிகளையும் செய்கிறது.

இதுபற்றி அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாக, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தது முதல், தி.மு.க., கூட்டணியினர், தங்கள் கூட்டணி ஓட்டுடன், அ.தி.மு.க., ஓட்டை பெற தனி கவனம் செலுத்துகின்றனர். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அ.தி.மு.க.,வின் பெயர், முகம் தெரிந்த நிர்வாகிகள் முதல், பகுதி செயலர்கள், மாவட்ட நிலை நிர்வாகிகள், முன்னாள் - இந்நாள் கவுன்சிலர்கள் என பட்டியல் பெற்று அவர்களது வீட்டுக்கே சென்று ஓட்டு சேகரிக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் முத்துசாமி பிரசாரத்தில் பங்கேற்காமல், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., நிர்வாகிகளை வீடுகளுக்கே சென்று சந்தித்து வருகிறார்.'தி.மு.க.,வின் பணபலம், ஆட்சி - அதிகாரத்தை கடந்த இடைத்தேர்தலில் காண்பித்ததால், புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம்' என்று பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தி.மு.க.,வுக்கு இணையாக உள்ள, அ.தி.மு.க.,வினர் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், என நேரிடையாக வழிகாட்டவில்லை. நோட்டோவுக்கு ஓட்டு போடுங்கள் என முக்கிய நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அது கட்சியினருக்கு பிடிக்கவில்லை. இது சரியான வழிகாட்டுதல் இல்லை என கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், அ.தி.மு.க.,வின் 95 சதவீத ஓட்டுக்கள் இம்முறை தி.மு.க.,வுக்கு செல்ல வாய்ப்புள்ளது.இதனால், தேர்தலின் கடைசி கட்டத்திலாவது, யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சரியான முறையில் பழனிசாமி காட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Karthik
பிப் 01, 2025 16:25

அதிமுக, தொகுதியை புறக்கணிக்க வில்லை. பங்காளி நோகாம ஜெயிக்க விட்டுக்கொடுத்துள்ளது. அடுத்த முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் புறக்கணிக்கிறோம் என்று சொல்லி இதேபோல விட்டுக்கொடுப்பர். இதெல்லாம் பங்காளிகளின் அண்டர் டீலிங். பாவம் தமிழக ம் மக்கள்.


Sridhar
பிப் 01, 2025 12:57

வோட்டே போடக்கூடாதுனு ஒரு அறிக்கை கொடுக்கலாமே? பொதுவா 65% வாக்குப்பதிவு ஆகும்னா, இவுங்க போடாததுனால எவ்வளவு % குறைந்ததுனு பாத்து, இவுங்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்குனாச்சும் தெரிஞ்சிக்கலாம்ல? ஏற்கனவே நம்ம ஆளுங்க சோம்பேறி, போடவேணாம்னா நிச்சயமா கடைபிடிப்பானுங்க.


ராமகிருஷ்ணன்
பிப் 01, 2025 12:16

திமுகவினரின் பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவுக்கு ஓட்டு போட கூடாது அது தான் உண்மையான எதிர்ப்பு. ஏதாவது சுயேச்சைக்கு போடுங்க.


rasaa
பிப் 01, 2025 12:03

ஈரோடு அதிமுக நிர்வாகிகளுக்கு சுக்கிர திசை.


Svs Yaadum oore
பிப் 01, 2025 11:11

ஈரோட்டில் இன்று பண மழை பொழியுமாம் .....இதுதான் திராவிட கருத்தியல் மற்றும் தமிழ் தேசிய கருத்தியல் .....தமிழே எழுத படிக்க தெரியாத தற்குறி கும்பலையும் ஆபாச சினிமா பின்னால் அலையும் மூடர் கும்பலையும் உருவாக்கி டாஸ்மாக் பணம் கொடுத்து வோட்டு வாங்குவதுதான் திராவிட மற்றும் தமிழ் தேசிய கருத்தியலாம் ....கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...


Svs Yaadum oore
பிப் 01, 2025 10:53

கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ....திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னதும் நாம் தமிழர் கட்சி தலைவன் .. திராவிடனுங்களுக்கும் நாம் தமிழருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது .....இரண்டும் ஒன்றுதான் ......இந்த ரெண்டு கட்சிகளுக்கும் மானமுள்ள தமிழன் எவனும் வோட்டு போட மாட்டான் ....


Madras Madra
பிப் 01, 2025 10:36

அ தி மு க வாக்காளர் திமுக வுக்கு வாக்கு அளித்தால் அவன் எப்படி அ தி மு க வாக்காளனாக இருக்க முடியும் ? கேவலம் . இதெல்லாம் ஒரு கட்சி இதற்க்கு ஒரு கொள்கை


V வைகுண்டேஸ்வரன்
பிப் 01, 2025 10:27

"இவ்வாறு அவர்கள் கூறினர்" - எந்த அவர்களும் எதுவும் கூறவில்லை. இது கட்டுரை ஆசிரியரின் பதற்றம், ஆதங்கம்.


veera
பிப் 01, 2025 12:47

அவர்கள் கூறவில்லை என்று இவர் எப்படி கூறுகிறார் என்று இவருக்கு புரியும்படி அவர்கள் கூறவேண்டும்...என்ன புரிஞ்சுதா..ஹி..ஹி..


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2025 10:07

நாதக இரு கழகங்களுக்கும் பொது எதிரி என்று பழனிச்சாமி சொல்வாரோ ??


Svs Yaadum oore
பிப் 01, 2025 09:47

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொன்னது நாம் தமிழர் கட்சி தலைவன் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் அவன்தான் ...திராவிடனுங்களுக்கும் நாம் தமிழருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது .....இரண்டும் ஒன்றுதான் ......வெட்கம் மானம் உள்ள தமிழன் இந்த ரெண்டு கட்சிகளுக்கும் வோட்டு போட மாட்டான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை