உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பள்ளிகளில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும்!

தமிழக பள்ளிகளில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பள்ளிகளில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும், அதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=za5oufo0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் அனைத்து பள்ளிக்குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசு பள்ளிகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் ஒரு தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல் நமது மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்த வகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்திய துணைக் கண்டத்திற்கே, தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

GS kumar
டிச 24, 2024 17:34

தமிழ்நாடு government மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த துப்பு இல்லை, தரமான ஆசிரியர்கள், பாதுகாப்பான பள்ளி கட்டிடம் நிறைய கிராமத்தில் இல்லை. இதை மறைக்க தான் ஆள் பாஸ் போடுவேன் என்கிறார் இந்த சுயநலமான திமுக மந்திரி மற்றும் வீடியோ அரசு. ஹிந்தியை எதிர்ப்பார்கள் , ஆனால் MLA MP நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி நடத்துகின்றனர் . அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிக்கக்கூடாது ஹிந்தியை , அவர்கள் வாழ்க்கை தரம் உயரக்கூடாது . என்ன ஒரு சுயநலம்


எவர்கிங்
டிச 24, 2024 15:56

தமிழகத்தில் இனி யாரும் மாடு மேய்க்கும் கூட வக்கற்ற நிலையை தீராவிஷம் உருவாக்கும்


எவர்கிங்
டிச 24, 2024 15:52

மத்திய அரசின் ஆணை மத்திய அரசின் நவோதையா கேந்திரிய வித்யாலையா சைனிக் பள்ளிகளுக்கு மட்டுமே பெருந்தும் என் தெளிவாக குறிப்பிட்ட பின்னரும் இந்த தீராவிஷ உருட்டு


kalvi thanthai - Baratha Naadu
டிச 24, 2024 15:50

உனது பெயரை 24 ம் புலிகேசி என்று வைத்து கொள்..... சரியாக இருக்கும்.... இன்னும்5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் அகில இந்திய/தேசிய அளவில் நடக்கும் தேர்வில் கடைசி இடத்தை நோக்கி தமிழன் பயணிக்கும் சூழல் உருவாகும், தற்குறி மக்கள் நிறைந்த மாநிலமாக உருவெடுக்கும் அன்த சாதனைக்கு சொந்தக்காரர் தீ மு க நிர்வாகமே.....


Narayanan
டிச 24, 2024 13:15

தொடரட்டும் கல்லூரிகளில் கூட ஆல் பாஸ் போட்டுவிடலாம் .. என்ன இப்போ ? அதுதான் அரசு பணம் தருகிறது . சும்மா இருந்தாலே போறும் . சும்மா இருக்க படிக்க வேண்டாம் . உருப்படாது .


vbs manian
டிச 24, 2024 13:03

கொஞ்சம் கொஞ்சமாக டிகிரி படிப்புக்குகளுக்கும் ஆல் பாஸ் முறை வந்தாலும் வரும். கல்வியை பற்றி அரசியல்வாதியின் மோசமான அணுகுமுறை வெட்ட வெளிச்சம். மரமண்டை சமுதாயம் உருவாகும். பள்ளிகளில் ஆசிரியரே வேண்டாம். அரசு செலவு குறையும்.


vijai
டிச 24, 2024 12:35

இதுதான் திராவிட மாடல் கருமம் நாட்டுக்கு கல்வி அமைச்சர் மாணவிகள் மாணவர்கள் பாழாக்கும் தமிழக அரசு


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 24, 2024 12:04

ஆசிரியர் பெருமக்களுக்கு ஜாலி. சொல்லி கொடுத்தால் என்ன சொல்லி கொடுக்காவிட்டால் என்ன. யாருக்கு என்ன தெரிய போகிறது. நமக்கு அதாவது ஆசிரியர்களுக்கு 30 தேதி சம்பளம் டாண் என்று வந்து விடும். இதேபோல் அனைவரையும் 12 வகுப்பு வரை பாஸ் செய்து விட்டால் இன்னும் சிறப்பு. கல்லூரி தொடர்ந்தால் அதனினும் சிறப்பு வேறொன்றும் இல்லை.


தமிழ்வேள்
டிச 24, 2024 11:59

எதிர்காலத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை சான்றிதழ் வைத்துள்ளவனை வேறு எந்த மாநிலமும் அங்கீகரிக்காது ..மாறாக தனி சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைய சொல்லும் ..தமிழக கல்லூரிகள், பல்கலை கழகங்களுக்கும் இதே நிலைதான் வரும் ...மூளை என்பது சிறிதும் அற்ற, போதை விற்கும் கும்பலை தேர்ந்தெடுத்து அரசு அமைக்க செய்தால் இதுதான் கதி ......


மக்கள் குரல்
டிச 24, 2024 11:46

இது மாணவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் அதல பாதாளத்திற்கு தள்ளும் செயல். நீங்கள் ஓன்று முதல் எட்டு வரை அவர்கள் படித்தாலும் சரி படிக்கவில்லை என்றாலும் சரி என்று பாஸ் செய்துவிடுவீர்கள். ஆனால் அவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்று எப்படி தெரியும். பின்னர் ஒன்பதாம் வகுப்பில் அவர்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர். எளிமையான நம் தாய்மொழி தமிழையே அவர்கள் படிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் கல்வியில் பின்தங்கி இருந்தால் கண்டுபிடித்து உரிய பயற்சி அளித்தால் தானே பின்னர்வரும் கடினமான பாடங்கள் கூட அவர்களுக்கு எளிமையாக புரியும். நீங்கள் எளிமையான பாடத்தை கூட சரிவர நடத்தாமல் ஆல் பாஸ் செய்துவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது? மிகவும் கேள்விக்குறிதான். ஓன்று மட்டும் தெளிவாக புரிகிறது நீங்கள் யாரும் முன்னேறி விடக்கூடாது யாருக்கும் சுயமாக சிந்திக்கும் அளவு அறிவு இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறீங்கள் என்பது. நீங்கள் கூறுவது மட்டும் தான் சரி என ஆமா சாமி போட இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் கைவைப்பது சரியா? உங்கள் பிள்ளைகளை இப்படி செய்விர்கள?


சமீபத்திய செய்தி