உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை

தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k70mioh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, தி.மு.க., நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் தி.மு.க., அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அங்கிருந்த அருப்புக்கோட்டை பா.ஜ., வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர். கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, தி.மு.க., எம்.பி., கனிமொழியிடம், மத்திய அமைச்சர் பார்லி.யில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தி.மு.க., ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
மார் 30, 2025 11:30

திமுகவை கூட ஓரளவுக்கு நம்பலாம், ஆனால் குஜராத்திகளுக்கும், மார்வாடிகளுக்கும் வால் பிடிக்கும் அண்ணாமலையை மட்டும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்!


pmsamy
மார் 30, 2025 09:15

ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி என்ன ஆச்சு அதை பத்தி பேச துப்பு இருக்கா


முருகன்
மார் 29, 2025 23:08

பதினொரு வருடமாக தொடரும் போது இது ஒரு பிரச்சினை இல்லை


T.sthivinayagam
மார் 29, 2025 16:30

அண்ணாமலை பையாஜி நேத்து கட்சி ஆரம்பிச்சு என்ன அழகா மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசுகிறார்கள் ஆனால் நீங்கள் பழைய போலிஸ் ஆபிசர் மாதிரி இன்னும் ஒபேத ஆடராக மேலிடத்துக்கே சப்பைகட்டு கட்டுறீங்க என்று மக்கள் வேதனை படுகிறார்கள்


Ray
மார் 29, 2025 15:15

பைத்தியக்காரன் கிழிச்சது கோவணத்துக்காச்சுன்னு சொல்வாங்க அண்ணாமலை நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுன்னு சொல்லப் போக அதுவே மிகப் பெரிய பேசு பொருளாகி நாட்டின்கடன் எவ்வளவுன்னு கேட்டு நாடாளு மன்றத்தையே உலுக்கியது நாடே கோவணாண்டியா இருக்கறது வெட்ட வெளிச்சமாகிவிட்டது மிக வேகமாக வளருவதாக சொல்லப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலை இதானான்னு நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது யாரைக்கேட்டு வாங்கினீங்கன்னு கொடைஞ்சாங்க இப்போ இந்த வரும் அரையாண்டுக்கு எட்டு லக்ஷம் கோடி கடன் வாங்கப்போறதா ஒன்றாத நிதி மந்திரி சொல்லியிருக்கார்.


பிரேம்ஜி
மார் 29, 2025 15:07

இது தேறாத கேசு! வெத்துப்பேச்சு வீராசாமி!


Oviya Vijay
மார் 29, 2025 14:35

அண்ணாமலை: அண்ணே, நான் சொல்றேன் எழுதி வெச்சுக்கோங்கண்ணே... 2026ல நிருபர்கள்: அட போய்யா... நீ எழுதி வெச்சுக்கோங்க எழுதி வெச்சுக்கோங்க அப்படின்னு சொன்னப்போ எல்லாம் எழுதி வெச்சு 10 குயர் நோட்டு வேஸ்ட் ஆனது தான் மிச்சம். ஆனா ஒன்னு கூட இதுவரைக்கும் நடக்கல...


vvek
மார் 29, 2025 21:02

ஓவியரின் கனவிலும் அண்ணாமலை வர்றார் போல....


Oviya Vijay
மார் 29, 2025 14:34

பெயர்: அண்ணாமலை வயது: 40 தொழில்: வாய்ச்சவுடால் ஒன்று மட்டும் சம்பாத்தியம்: நண்பர்கள் உதவியுடன் காலந்தள்ளுவது அரசியல் அறிவு: ஜீரோ - புஷ்வானம் பிணக்கு: சொந்த கட்சியின் சீனியர்களுடன் பிடித்தவர்கள்: ஜால்ரா தட்டும் முட்டு கொடுக்கும் சங்கிகள் பிடிக்காதவர்கள்: எதிர்க்கட்சி மீடியாக்கள் அடிமை: மத்திய சங்கி அரசுக்கு பிடித்த டயலாக்: அண்ணே. ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம் பொங்குவது: எதிர்க்கட்சிகளை பார்த்து பதுங்குவது: சொந்த கட்சியில் நடக்கும் அராஜகத்தை கண்டும் காணாதது போல் எதிர்காலம்: சீமானை போல் பேசிப் பேசியே காணாமல் போகப் போவது. தமிழக மக்களால் என்றைக்குமே தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பில்லாமல் மத்திய அரசின் கடைக்கண் பார்வையால் வேண்டுமானால் மத்திய அமைச்சர் பதவி.


Ray
மார் 29, 2025 20:52

சவடால் - சவடால் வைத்தி


Amar Akbar Antony
மார் 29, 2025 14:29

தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தி.மு.க., ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை - குற்றத்தை ஆதாரத்துடன் நீதிமன்றங்களுக்கு சென்று நீதி பெறுங்கள். நம்புவோம்


RAAJ68
மார் 29, 2025 14:20

உங்கள் நாடகங்களையும் யாரும் நம்ப மாட்டார்கள். உங்களை திமுகவின் ஏஜென்ட் என்றும் பகிரங்கமாக யூடியூபில் பேசுகிறார்கள் நீங்கள் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை பொய்யாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு போடுங்கள். அண்ணா திமுகவும் பிஜேபியும் கூட்டணி சேர விடாமல் செய்வதற்காக உங்களுக்கு திமுகவிலிருந்து அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக நேற்று கூட யூடியூபில் ஒருவர் கூறியுள்ளார். இந்த பகிரங்க குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன. திமுகவை வசை பாடுவது போல் எதற்கு இந்த நாடகம்.


சமீபத்திய செய்தி