உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலம் அளப்பதற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ., தலையாரி இருவரும் கைது

நிலம் அளப்பதற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ., தலையாரி இருவரும் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் அளவை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் அருகே திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்டது பெறுவாக்கோட்டை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ஒருவர், தன் நிலத்தை அளந்து தர வேண்டும் என்று கூறி விஏஓ அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நிலத்தை அளப்பதற்கு லஞ்சமாக ரூ.3500 தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது கூறினார்.அதன்படி, ஆயிரம் ரூபாய் முன்பணம் தரப்பட்டது. மீதமுள்ள 2500 ரூபாயை கொடுப்பதற்கு முன்னதாக, லஞ்சம் கேட்பது பற்றி மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரியிடம் மனுதாரர் வழங்கினார்.அதை அவர்கள் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணைக்குப் பிறகு, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நைனா முகமது 31, தலையாரி (கிராம உதவியாளர்) சித்ரா 48, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nagarajan M
மே 06, 2025 12:28

மிகவும் எளிதாக அனுகக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றார்கள் உள்ளூர் போலீஸ் கிட்ட வாலாட்ட முடியுமா


R. THIAGARAJAN
மே 06, 2025 07:19

All district collectors must be displayed the CORRUPTIONS AND BRIBES CASE DATAS ON WEEKLY BASIS IN THEIR OFFICE ALSO THE SAME CAN BE DISPLAYED IN ALL THE RELEVANT GOVERNMENT OFFICES. A SQUD MUST BE FORMED SECRETLY AND MAKE SURPRISE VISITS TO ALL THE GOVERNMENT OFFICE. THIS WILL BE CONTROLLED THE CORRUPTIONS AND BRIBES CULTURE IN LIEU OF KEEPING INEFFICIENCY PROCEDURES I E DELAYING AND DRAGGING


Kasimani Baskaran
மே 06, 2025 03:57

புகார் கொடுத்தவர் பயமில்லாதவர் போல தெரிகிறது. கூட்டாக விரைவில் விஏஓ மற்றும் தலையாரிகள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பார்கள் போல தெரிகிறது.


Anantharaman Srinivasan
மே 06, 2025 00:05

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நைனா முகமது 31, கிராம உதவியாளர் சித்ரா 48, ஆகிய இருவரும் கைது. OK. புகார் கொடுத்தவர் நிலையென்ன.? மற்ற ஊழியர்கள் அவரை அலைகழிக்காமல் நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் கிடைக்க தாசில்தார் கவனித்துக்கொள்வாரா..?


Anantharaman Srinivasan
மே 06, 2025 00:00

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நைனா முகமது 31, கிராம உதவியாளர் சித்ரா 48, ஆகிய இருவரும் கைது சரி. புகார் கொடுத்தவர் மீது பிற ஊழியர்கள் பழி வாங்காமல் அவர் நிலத்தை அளவீடு செய்து சான்றிதழ் தருவார்களா..? தாசில்தார் பொறுப்பேற்றுக்கொள்வாரா..?


Anantharaman Srinivasan
மே 05, 2025 23:52

லஞ்ச ஒழிப்புத்துறையில் கருப்பு ஆடு இருந்து புகார் கொடுத்தவரை காட்டிக்கொடுத்து விட்டால் என்ன ஆகும்.?


தாமரை மலர்கிறது
மே 05, 2025 23:33

கோட்டாவில் விளைந்த திராவிட மணிக்கதிர்கள்


Oviya Vijay
மே 05, 2025 22:31

மக்களின் மனநிலையில் சமீப காலமாக நல்ல மாற்றம் தெரிகிறது... இது வரவேற்கப் படக்கூடிய ஒன்று... மக்கள் இவ்வாறே துணிந்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்... லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற பெரும்பாலான மக்களின் மனநிலை முதலில் மாற வேண்டும். இந்தியன் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடியில் இடம்பெறுவது போல நாம் கொடுப்பதனால் தான் அவர்கள் வாங்குவதாக அவர்களும், அவர்கள் கேட்பதனால் தான் நாம் கொடுக்கிறோம் என நாமும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறோமேயன்றி இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு முனைய மறுக்கிறோம்... அங்கொன்றும் இங்கொன்றுமாக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பிடிபடுகிறார்கள்... அது தொடர வேண்டும்... இவ்வாறு லஞ்சம் வாங்குவோர் பெயர்கள் மீடியாக்களில் பெரிய அளவில் ஹைலைட் செய்யப் பட வேண்டும்... லஞ்சம் வாங்கினால் எங்கே தன் பெயர் கெடுவதுடன் தன் நிரந்தர வேலைக்கும் உலை வைத்து விடுவார்களோ என்ற பயம் தொற்றிக் கொள்ளுமானால் லஞ்சம் வாங்கும் பேர்வழிகள் குறைவர்... தொடரட்டும் மக்களின் துணிச்சல்...


முக்கிய வீடியோ