உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, அதிகாலையில் கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 மகள்கள் ஹேமி மித்ரா (15), மெளனா ஷெரின் (11). நவரசம் பள்ளியில் 10மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x12izgp2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கேரளாவில் உறவினர் இல்ல விஷேசத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு கேரளாவில் இருந்து காரில் அரச்சலூர் திரும்பியுள்ளனர். அப்போது காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த புளியமரத்தில் மோதியுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமிமித்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 வயது சிறுமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Srinivasan
மே 20, 2025 15:23

தினமலர் எல்லா செய்தியிலும் இரவு மற்றும் அதிகாலை பயணம் தவிர்க்கவும் சொல்கிறீர்கள் ஆனால் யாரு அதை கேட்கிறார்கள், மிகவும் அறியாமை


sundarsvpr
மே 20, 2025 11:59

இரவில் எட்டு மணிக்குள் உணவை முடித்து ஒன்பதரைக்குள் உறங்குதல் அதிகாலையில் நாலு மணிக்கு எழுந்து ஆறு மணிக்குள் காலைக்கடன்களை முடிக்கும் பழக்க வழக்கங்கள் நடைமுறைப்படுத்தாதவரை நம்முடைய வாழ்க்கை சௌகரியமாக இருப்பதாக கருத முடியாது. இரவில் தூங்கும் காலம் ஆண்டவனுடையது. இதில் குறிக்கிடல் நிநாயமாய் இருக்காது.


புதிய வீடியோ