உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், கடந்தாண்டு, டிச., 25ல், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர். ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதியில் மட்டும், ஏழு சொகுசு பங்களாக்களில் கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக, பள்ளிக்கரணை போலீசாரும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பின், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2013ல், மாம்பலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரித்தனர். அந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதே ஞானசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, திருட்டு வழக்கில் ஞானசேகரனின் பெயரும் சேர்க்கப்பட்டது.இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று மனுதாரர் முறையிட்டார். இதனை விசாரித்த கோர்ட், ஞானசேகரன் மீதான வழக்குகளின் விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

S.V.Srinivasan
ஏப் 04, 2025 09:58

யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க சொல்லுங்க கனம் கோர்ட்டார் அவர்களே. மற்ற விஷயங்கள் தானாக வெளி வந்து விடும். ஆனா ஒன்னு, நீதிமன்றங்கள் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை.


sankaranarayanan
ஏப் 03, 2025 19:03

ஞானசேகரன் மீதான வழக்குகளின் விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் இது இப்போது முடியாது .ஏனென்றால் ஞானசேகரன் மீது பல நூறு வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கின்றன.எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாது.எல்லாவற்றிற்கும் சார் தான் முக்கியமாம் அந்த சார் யார்?சார் ,எங்கே சார் இருக்கிறார் ?என்று முதலில் கண்டுபிடித்தால் எல்லா உண்மைகளும் தானாகவே வெளிவந்துவிடும்.இல்லையேல் இப்போதைக்கு இந்த ஜென்மத்துக்கு இந்த வழக்கு முடியாது


Rajan A
ஏப் 03, 2025 17:54

சிபிஐயாவது சார் யாரென்று கண்டுபிடிக்குமா?


raja
ஏப் 03, 2025 17:46

யார் அந்த சார்....இவனை ஏன் இன்னும் குண்டாசில் போடலை...


தமிழன்
ஏப் 03, 2025 17:46

இந்த போட்டோவ போடுவீங்க அறுவெறுப்பாக உள்ளது என்கவுண்டர் செய்யும் போலிஸ் வரி பணத்துல உள்ள கறியும் சோறும் திண்று கொழுத்து அடுத்தவளை தேடி அரிப்பெடுத்து திரிவான் போட்டுத் தள்ளுங்க


Ramalingam Shanmugam
ஏப் 03, 2025 16:35

மாவு கட்டை ஏன் aiims இல் check panna koodaathu


Rajan A
ஏப் 03, 2025 17:56

மாவு புளித்திருக்கும்


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 16:00

இதெல்லாம் கூட செய்யாம அந்த கலகத்தில இருக்க முடியுமா? அடிப்படைத் தகுதியே அதுதானே?.


srinivasan
ஏப் 03, 2025 15:28

இவன் தவற செய்திருந்தால் உடனே சுட்டுத் தள்ளவும். இன்னும் கேஸ் கோர்ட் என்று 20 வருடம் இழக்க வேண்டாம்.


Ramalingam Shanmugam
ஏப் 03, 2025 16:32

no who is that sir cbi has to find out


KavikumarRam
ஏப் 03, 2025 14:13

இதுக்குதான் கச்சத்தீவு, வக்ஃப் வாரியம், டீலிமிடேஷன், இருமொழிக் கொள்கை தீர்மானம்னு சட்டசபைல காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுல வேற ஆண்டிமுத்து மாறு வேற கரைவேட்டி, பொட்டு மேட்டர கையில எடுத்து திராவிட ஸ்டாக் மீடியாக்களை, இத சுத்தியே கும்மியடிக்க வச்சுக்கிட்டு இருக்கானுங்க.


அப்பாவி
ஏப் 03, 2025 14:03

படத்தைப் பாருங்க யுவர் ஆனர். மாவுக்கட்டு பிரிக்கவே ரெண்டு மாமாங்கம் ஆகும் யுவர் ஆனர். 2047 க்குள்ளாற நடடிக்கை எடுத்துடறோம் யுவர் ஆனர். இந்த வாதத்தை ஏற்று கோர்ட் 2047 ஏப்ரல் 1 வரை வாதத்தை தள்ளி வைக்கலாம்.


Yes your honor
ஏப் 03, 2025 17:26

அடப்பாவி, நீ எப்பய்யா பிஜேபிக்கு மாறுனே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை