உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா - மெத்தபெட்டமைனில் கோவை செழிக்கிறது!

கஞ்சா - மெத்தபெட்டமைனில் கோவை செழிக்கிறது!

அவிநாசி: ''கல்வி மற்றும் தொழிலில் செழிக்க வேண்டிய கோவை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களில் செழிக்கிறது,'' என்று அவிநாசியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை நேற்று திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தது.

அதில் நடந்த பொதுகூட்டத்தில், நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

கொங்கு மண்டலம் என்றால் தனி சிறப்பு, மரியாதை உண்டு. அங்கு வருத்தமான சில சம்பவங்கள் நடப்பது, வேதனையளிக்கிறது. விடியலை தருகிறோம் என்று கூறிய அரசு, இன்று விடியா அரசாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள நகரம் கோவை என்று சொன்னார்கள். தற்போது, பாதுகாப்பு இல்லை. போதை பொருட்கள் புழக்கம், பள்ளி, கல்லுாரி வாசல்களில் நடக்கிறது. போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக வர, 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வருகின்றனர். கூட்டு பாலியல் விவகாரத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள, கட்சி தலைவர் ஒருவர், 8:00 மணிக்கு அப்பெண் அங்கு எதற்கு செல்கிறார் என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனை முதல்வர் கண்டிக்கக்கூடவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாளைக்கு தேர்தல் வைத்தாலும், 234 தொகுதியில், தி.மு.க., 'டெபாசிட்' இழக்கும். கல்வி, தொழிலில் செழிக்க வேண்டிய ஊர், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருளில் செழிக்கிறது. முதல்வருக்கு ஒரே கவலை, 2026 தேர்தலில், துணை முதல்வர் உதயநிதியை, முதல்வராக்க வேண்டும் என்பதுதான். இது பகல் கனவு. ஒரு போதும் நடக்காது. மத்திய அரசு தமிழகத்துக்கு, 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு உட்பட நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளது. அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, 2026 தேர்தலில் வென்று, மக்களுக்கான திட்டங் களை வழங்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Svs Yaadum oore
நவ 06, 2025 12:39

ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு.. சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் எதிரே வந்த அப்பாவி இரெண்டு பெண் குழந்தைகள் தந்தை உயிரிழப்பு .....திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது ...


தமிழ்வேள்
நவ 06, 2025 12:38

வேறென்ன சொல்ல ?


Modisha
நவ 06, 2025 11:27

கோவை மட்டும் தானா, தமிழகமே போதை இருளில் மூழ்கி இருக்கிறது. திராவிட மாடல் அவலம் .


Ajrjunan
நவ 06, 2025 10:38

அணைத்து உயர ரக போதைப்பொருட்கள் எல்லாம் குஜராத் துறைமுகம் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்ற சேதியை இதே நாளிதழிதான் பாரத்தேன் . அதை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண சொல்லுங்களேன்.


ஆரூர் ரங்
நவ 06, 2025 11:26

துறைமுகத்தில் அல்ல. இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையில் பிடிச்சது பிஜெபி அரசு.


Modisha
நவ 06, 2025 18:45

தமிழக எல்லைக்குள் varum போது நீங்க தூங்கிக்கிட்டு இருந்தீர்களா ? வெட்கம்கெட்ட ஊ பிஸ்கள் .


Raja k
நவ 06, 2025 09:10

கோவை கஞ்சாவால் செழிக்கவில்லை, உங்களை போன்ற அரசியல் வியாதிகள் கோவையை ஏறெடுத்து பார்காது, எந்த உதவியும் செய்யாத போதிலும், கோவை மக்களின், அயராத கடின உழைப்பால் செழித்து நிற்கிறது, இன்று தென்னிந்தியாவில் வளர்ந்த நகரமாக நிமிர்ந்து நிற்க காரணமே, கோவை மக்களின் கடின உழைப்புதான், எந்த அரசாங்கத்தையும் எதிர்பார்த்து காத்திராமல் தமக்கு தேவையானதை தாங்களே முயன்று உருவாக்கி கோவையை கட்டமைத்துள்ளார்கள், கஞ்சாவால் செழிக்கிறது என்று நீங்கள் பேசுவது அனைத்து கோவை மாவட்ட மக்களையும் அவமதிக்கும் செயலாகும்


Svs Yaadum oore
நவ 06, 2025 09:44

கஞ்சாவால் செழிக்கிறவன் எல்லாம் மெத்து கொரியர் கம்பெனி நடத்தி கட்சி பதவியுடன் செழிப்பாக உள்ளார்கள் ..


Mario
நவ 06, 2025 09:03

இப்படிக்கு நாலரைக்கொடி


vivek
நவ 06, 2025 18:30

இப்படிக்கு லண்டன் முட்டு சந்து


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 06, 2025 08:58

மூர்க்கம் எங்கெங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே இது நிகழும் ......


Ajrjunan
நவ 06, 2025 11:29

போய் தள்ளி நின்னு புலம்பு.


திகழ்ஓவியன்
நவ 06, 2025 12:53

தனியார் க்கு எப்போ போர்ட் இலவசமா கொடுத்தோமோ அன்றே நாடு அழிந்தது


Svs Yaadum oore
நவ 06, 2025 08:21

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனெல்லாம் வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி ஏற்றால் இது போன்ற படு கேவல சம்பவங்கள் நாட்டில் நடப்பதை தடுக்க முடியாது ....


அருண் பிரகாஷ் மதுரை
நவ 06, 2025 08:06

கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும்


அப்பாவி
நவ 06, 2025 07:39

ஒண்ணு தெரிஞ்சிக்கணும். வாழ்க்கையில் வசதிகள் கூடினால் குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் தானே வந்து ஒட்டிக்கும். கோவை மக்கள் கடந்த 10 வருசமா பொற்கால ஆட்சியில் ரொம்ப வசதியாயிட்டாங்க. கஞ்சா, மெத் பொருள்கள் உபயோகமும் அதிகமாயிருச்சு. இது வளர்ச்சி.


vivek
நவ 06, 2025 07:53

உன் சொந்த கதையை யாரு கேட்டா


Svs Yaadum oore
நவ 06, 2025 08:23

ஆமாம் ....தமிழ் நாட்டில் வசதியாக வாழறவன் எல்லாம் மொத்தமும் கஞ்சா மெத்து கள்ள சாராயம் டாஸ்மாக் என்று மட்டையாகி கிடக்கறானுங்க ...


சமீபத்திய செய்தி