உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து போலீஸ்காரரிடம் ரவுசு காட்டிய காங் எம்எல்ஏ!

போக்குவரத்து போலீஸ்காரரிடம் ரவுசு காட்டிய காங் எம்எல்ஏ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை அப்புறப்படுத்த கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அவரது ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலைய போலீஸ்காரர் பிரபாகரன், 35. அண்ணா சாலை ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்தது.காரை அங்கிருந்து அகற்றுமாறு, ஓட்டுநரிடம் பிரபாகரன் கூறியுள்ளார். அப்போது, அதில் இருந்த காரின் உரிமையாளரான மயிலாடுதுறை காங்., - எம்.எல்.ஏ., ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 'சாலையில் நின்று பிச்சை தானே எடுக்கிறீர்கள்' என, போலீசாரை வசை பாடியுள்ளார்.மேலும், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பிரபாகரனை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து வேறு காரில் புறப்பட்டு சென்றார். கடமையை செய்த போலீஸ்காரர் மீது, பட்டப்பகலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, போக்குவரத்து உயர் அதிகாரியிடம் கேட்டபோது, 'சம்பவம் குறித்து சட்டம் - ஒழுங்கு போலீசார் விசாரிக்கின்றனர். கண்டிப்பாக வழக்கு போடப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
அக் 19, 2025 08:28

தீயமுக மாடல் ஆட்சியில் போலீசாருக்குக் கூட விடியல் இல்லையே!


NAGARAJAN M
அக் 19, 2025 08:16

ஓட்டு பிச்சை வாங்க நீங்க ரோட்ல வரனும்ல


Modisha
அக் 19, 2025 08:06

அந்த விஷ கூட்டணியில் உள்ளவர்கள் போலீஸ் உட்பட யாரை வேண்டுமானாலும் நடு வீதியில் தாக்கலாம் . போலீஸ் , சட்டம் , நீதிமன்றம் எல்லாம் வேடிக்கை பார்க்கும். மக்களும் இந்த வீரத்தை பாராட்டி அவங்களுக்கே வோட்டு போடுவாங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை