உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி., ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் கே.கே.புதுாரை சேர்ந்தவர் ஏ.சந்திரசேகரன். திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில், அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு பின், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை ஊதிய உயர்வை நிறுத்தி, 2014ல், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., உத்தரவு பிறப்பித்தார். இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டது.இந்நிலையில், முறையாக தகவல்களை தெரிவித்ததாகவும், அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல், தனக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தும், 2015- - 16ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் அவரின் பெயரை சேர்க்கும்படியும், கடந்த ஏப்ரல் 25ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சந்திரசேகரன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை சேர்க்கக்கோரி, உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன் இரண்டு முறை அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, இதுவரை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை உத்தரவும் பெறவில்லை. இது, நீதிமன்ற அவமதிப்பு என்பதால், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., ஜி.வெங்கடராமன் ஆகியோர், ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.இந்த இடைப்பட்ட காலத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினாலோ அல்லது மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றாலோ, இருவரும் நேரில் ஆஜராக தேவையில்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Appandairajan p
டிச 23, 2025 05:31

இந்த மாதிரி முறைகேடுகளை தெரிந்தே செய்கிறார்கள் எல்லோராலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடமுடியாது, காரணம் துறை யின் பழிவாங்கள் தொடரும் நிலை உள்ளது அதனால் பலரும் வழக்கு போட பயப்படுகிறார்கள் இது என் சொந்த அனுபவம் அஞ்சல் துறையில்உ. ம் 1983 கோர்ட் உத்தரவு எனக்கு சாதகமாக வந்துவிட்டு எல்லா பலன்களையும் பெற்றுவிட்டேன் ஆனாலும் என் ஓய்வு 2009/9/வரை உயர் அதிகரிகளால் பழிவாங்கி அவமானப்பட்டுள்ளேன் ஆனால் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் 8/10 மதிப்பெண் பெற்று நல்லபடியாக ஓய்வு பெற்றேன்


Kasimani Baskaran
டிச 23, 2025 03:58

வில்சனுக்கு ஒரு கோடி பீஸ் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கவேண்டும்.. வரவர உயர்நீதிமன்றங்களுக்கு தீம்க்கா அரசு மீது பயம் போய்விட்டது.


Krishna
டிச 22, 2025 23:33

These Judges Will Never Punish Any PowerMisusing MegaLooting RulingParties& Stooge Officials But Will Act Only Against Supreme People Even for PettyButCookedupMatters. Better Abolish them And BringBack SupremePeoples MahaPanchayats


Velan Iyengaar, Sydney
டிச 22, 2025 23:25

இந்த நீதிபதிக்கு எதிராக டீய மூ கா inti கூட்டணியினர் முன் வருவார்களா? எங்கே குருமா மற்றும் ஊ ஃபீஸ்?


Gajageswari
டிச 22, 2025 21:53

குறைந்த பட்சம் 24மணி நேரம் சிறை தண்டனை விதிக்க வேண்டும். இவர்கள் நீதிபதியைவீட மெத்தை படித்தவர்கள். இவர்கள் மேல் வழக்கு வராத அளவு நிர்வாகம் செய்து இருக்க வேண்டும். சுய. நீதிமன்றம் உத்தரவு நடைமுறை படுத்துவதில் இருக்க வேண்டும் சொல்


சிட்டுக்குருவி
டிச 22, 2025 21:37

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் ஒருமுறையாவது தண்டனை கொடுத்தால் தவிர அவமதிப்பு நிறுத்தபடாது .


mohana sundaram
டிச 22, 2025 21:19

அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்க வேண்டும்.


sankaranarayanan
டிச 22, 2025 21:19

இப்படியா ஒவ்வொரு விசாரணையிலும் நீதி மன்ற அவமதிப்பு என்று சொல்லி பல விசாரணைகளை கொண்டஅரசுதான் இந்த திராவிட மாடல் அரசு இந்த அரசு நீதி மன்ற அவமதிப்புகள் அரசு என்றே கருதி உச்ச நீதிமன்றமே அரசை உடனே கலைக்கலாம்


M Ramachandran
டிச 22, 2025 20:58

திமுகவின் ஆட்சியின் கடைசி காலத்தில் உள்ளது. இப்போராதாவது அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் அரசு சம்பளம் பெறுவதியை உணர்வார்களா? அல்லது ஜால்றா தான் அடிப்பேன் என்றால் அடுத்து வரும் அரசு இவர்களை நசுக்கும்.


சுந்தர்
டிச 22, 2025 20:18

இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. எதற்காக இவ்வளவு நாள் ஆஜராவதற்கு?


முக்கிய வீடியோ