உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய பணியிடங்கள் உருவாக்க அறநிலையத்துறை முடிவு

புதிய பணியிடங்கள் உருவாக்க அறநிலையத்துறை முடிவு

சென்னை : ஹிந்து சமய அறநிலைய துறையில், புதிதாக கோவில் செயல் அலுவலர் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து இணை கமிஷனர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கோவில்களுக்கு தினமும் வரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நலன் கருதியும், கோவில்களை திறம்பட நிர்வகிக்கவும், கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடப்பதை கண்காணிக்கவும், புதிதாக இணை கமிஷனர், உதவி கமிஷனர், செயல் அலுவலர் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை, நிலை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரிவாக பரிசீலனை செய்ய பல்வேறு விபரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, புதிதாக செயல் அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டிய கோவில்களின் பெயர்கள், ஊர், கோவில் சொத்துக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, திருவிழாக்கள் மற்றும் திருப்பணி விபரங்களுடன், சம்பந்தப்பட்ட கோவில் அறங்காவலர் குழு தீர்மான நகலையும், வரும் 14ம் தேதிக்குள், தனிநபர் வழியே, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல, செயல் அலுவலர் நிலை உயர்த்த வேண்டிய கோவில்களின் விபரங்களையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V GOPALAN
ஆக 11, 2025 14:53

Rs.6 Lacs for sweeper post in Srirangam temple.


Bhaskaran
ஆக 11, 2025 13:06

சிவன் சொத்து குலநாசம் அதிகாரிகள் குடும்பத்தை பூண்டூடு அடிச்சுப்போடும்


ram
ஆக 11, 2025 12:16

கிரிப்டோ ஆட்களை ஹிந்து அறநிலைத்துறையில் நுழைக்க


அரவழகன்
ஆக 11, 2025 11:54

ஆட்சி மாறும் முன் நல்ல சுருட்ட வழி...


G Mahalingam
ஆக 11, 2025 08:50

ஆட்சியை வீட்டு போகும் போது இருக்கிறதையும் கொள்ளை அடித்து விட்டு போக போகிறார்கள். இதன் மூலம் 2000 கோடி திருட போகிறார்கள்.


Jack
ஆக 11, 2025 07:35

கோவில் நிர்வாகங்கள் திராவிட கும்பல்களின் கையில் …கிடைத்த பூ மாலை …


pandit
ஆக 11, 2025 07:08

கொள்ளைக்கூட்டம் அதிகரிப்பு.


கோமாளி
ஆக 11, 2025 07:06

புதிகாக கொள்ளையடிக்க முடிவு


adalarasan
ஆக 11, 2025 06:56

தேர்தல் நெருஙக நெருஙக லாரிகள் மூலமாக கனிகா வளஙகள் அண்டை மாநிலங்கலுக் கு கொள்ளை அதிகமாகும்


Svs Yaadum oore
ஆக 11, 2025 06:34

பக்தர்கள் நலன் கருதி , வளர்ச்சி பணிகள் கண்காணிக்க , புதிதாக இணை கமிஷனர், உதவி கமிஷனர், செயல் அலுவலர் தேவையாம் ....இப்பொது இருக்கும் கமிஷனர் என்ன திறம்பட பெருசா நிர்வாகம் செய்தார்கள்?? ....இந்த புதிய கமிஷனர்களுக்கு AC கார் , அலுவலகம் , லட்சக்கணக்கில் சம்பளம் எல்லாம் விடியல் அப்பன் வீட்டு பணத்திலா கொடுப்பார்கள் ??....


Rajagopalan R
ஆக 11, 2025 12:56

சிரிய கோவில் அர்ச்சகர்கள் இன்னும் 1000 ரூபாய் மாத சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் அதை உயர்த்தாமல் பல லட்ச ரூபாய் கொடுத்து அதிகாரிகளை நியமிக்கிறார்கள்


புதிய வீடியோ