வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த வானிலை அறிக்கையை நம்பி எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கடந்த 17ஆம் தேதி அன்று சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு கலர் அலர்ட் கொடுத்தனர் ஆனால் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை எனவே எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் பல வீடுகளில் தண்ணீருடன் கழிவு நீர் கலந்து தரைமட்ட தொட்டி நிரம்பியுள்ளது அதை வெளியேற்றாமல் அப்படியே வைத்துள்ளனர் ஏனென்றால் மறுபடியும் பலத்த மழை பெய்தால் தண்ணீர் இறைத்தது வீணாகிவிடும் மறுபடியும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்படியே விட்டு உள்ளோம். இப்போது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் சென்னையில் சாதாரண மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறி இருந்தாலும் ஒரு நிச்சயமற்ற செய்தியாகத்தான் பார்க்க முடிகிறது. திடீரென்று ஆரஞ்சு அலெர்ட் கொடுப்பார்கள். இதுபோன்ற ஒரு நிச்சயமற்ற வானிலை அறிக்கை கடந்த காலங்களில் சில மாதங்களாக நிலவி வருகிறது. அந்த காலங்களில் அதாவது 1960 களில் எந்த உபகரணமும் கிடையாது தொலைக்காட்சிகள் கிடையாது கைப்பேசிகள் கிடையாது வானொலி செய்தியை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் அப்போது புயல் வரும் தேதி மழை பெய்யும் நேரம் எல்லாவற்றையும் சரியாக கனித்து கூடறியிருந்தார்கள் இரவு விடிய விடிய மழை பெய்யும் . வானொலி ஒரு மணிக்கு ஒரு முறை புயல் நிலவரத்தை கூறிக் கொண்டே இருக்கும். இப்போது என்னவென்றால் உபகரணங்கள் இல்லை கணிக்க முடியவில்லை என்று கூறுகிறது வானிலை அறிவிப்பு நிலையம்.
காற்றழுத்த தாழ்வுக்கு வேற வேலையே கிடையாதா? அடிக்கடி வருகிறது