உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தொழிற்கல்வி சரியில்லை: இனி புது நடைமுறை என்கிறார் திவ்யா

தமிழகத்தில் தொழிற்கல்வி சரியில்லை: இனி புது நடைமுறை என்கிறார் திவ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓமலுார்: ''தமிழகத்தில் தொழிற்கல்வியை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்,'' என, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.அரசு பாலிடெக்னிக் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. அக்கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:அரசு பாலிடெக்னிக்கில் படிக்க வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்களாகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகர்களாகவும் நாம் இருக்க வேண்டும். நாம் அளிக்கக்கூடிய தகவல்கள் அனைத்தையும், மாணவர்கள் உள்வாங்கி, அவற்றை கையாளும் திறனை வளர்க்க வேண்டும். ஒரு மாணவரை, ஆண்டுக்கு ஒரு முறையாவது, துறை சார்ந்த போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும். நடத்திய பாடத்தில் மறுநாள் தேர்வு வைத்து மதிப்பிட வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை, ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான தேர்வு மதிப்பீடு முறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இனி, இன்டர்னல் - 40, எக்ஸ்டர்னல் - 60, எம்.சி.க்யூ., வடிவில் தேர்வு முறை, செய்முறை தேர்வு ஆகிய புது நடைமுறைகள் நடப்பு கல்வியாண்டில் பின்பற்றப்படும். இதன் வாயிலாக மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு நன்றாக அமையும். அதற்கு இந்த பயிற்சி உங்களுக்கு உதவும். இவ்வாறு பேசினார்.கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி, தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, அரசு பாலிக்டெக்னிக் முதல்வர்கள், ஆசிரியர்கள் என, 400 பேர் பங்கேற்றனர். ஏற்கனவே, திருநெல்வேலி, திருச்சியில் இப்பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சேலத்தில் நடந்துள்ளது.

50 சதவீதமாக சரிவு

மாநில உயர்கல்வித்துறை மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் பேசியதாவது:தொழில் துறைக்கு டிப்ளமோ மாணவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். அதனால் அதிக நபர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைந்துள்ளது. மாணவர்கள் அடிப்படை கல்வியை புரிந்து படிக்கும் படியும், அதை கையாளும்படி, தகுதி, திறனை வளர்க்க வேண்டும். இவை எல்லாம் ஆசிரியரான உங்களிடம் உள்ளது. மாணவர்களை அதிக நேரம், 'லேப்'பில் ஈடுபடுத்த வேண்டும். 1,000 மாணவர்களின் வாழ்க்கை, உங்கள் கைகளில் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே போனால், ஆசிரியர் பணிக்கு பாதிப்பு ஏற்படும். ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Balakrishnan karuppannan
ஜூன் 28, 2025 17:20

இது நம்ம திராவிட மாடல் தொழில் துறை மற்றும் கல்வி அமைச்சருக்கு தெரியுமா...


சாமானியன்
ஜூன் 27, 2025 19:11

தரம் கெட்டுள்ளது உண்மை. ஐடி கோர்ஸ் படித்து விட்டு டாக்ஸி ஒட்டுகிறான். தரத்தை உடனடியாக உயர்த்தும்போது அரசியல் தலையீடு கூடவே கூடாது. தரம் தாழ்ந்ததற்கு அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடே காரணம்.


M S RAGHUNATHAN
ஜூன் 27, 2025 17:06

எந்த கல்வியும் சரியாக இல்லை ? காரணங்கள். பல. 1. கல்வியின் தரம்.சரியாக இல்லை. 2. தேர்வில்.மதிப்பெண்கள் வாரி வழங்கப் படுகின்றன 3. ஆசிரியர்கள் அக்கறையின்மை. 4. ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில்லை. 5. ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அறவே கூடாது. 6. 8 வகுப்புவரை All Pass திட்டம் தவறு. 7. SC/ST scholarship தகுதியின் அடிப்படையில் கொடுக்கப் பட வேண்டும். Arrears வைத்தால் scholarship/refund of fees நிறுத்தி விட வேண்டும். 8. மாணவ, மாணவிகள் தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபட்டால் RUSTICATE செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 27, 2025 15:11

டிப்ளமா ITI படித்தவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இருக்கிறார்கள். டிகிரி படித்த ஆட்கள்தான் வெள்ளை உடை கசங்காமல் சம்பளம் வாங்க நினைக்கிறார்கள். டிப்ளமா ITI படித்த பலர் சுய தொழில் செய்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். முக்கால்வாசி என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒன்றுக்கும் உதவாதவை.


மூர்க்கன்
ஜூன் 27, 2025 22:05

வயித்தெரிச்சல் பிடிச்சவங்க புலம்பல்ஸ் இப்படித்தான் இருக்கும் இல்லையா ??ஆருர்ராங்


M S RAGHUNATHAN
ஜூன் 27, 2025 15:09

Internal Marks should not be more than 20. Girl students will be exploited if the IA marks are 40. The question papers should be set by a different university professors.


sridhar
ஜூன் 27, 2025 13:34

தொரிற்கல்வி மட்டும் தானா


Padmasridharan
ஜூன் 27, 2025 13:22

கல்வித்திட்டமே சரியில்லை சாமி. . ஒரு பக்கம் கல்வியை செல்வமாக கருத சொல்லி கட்டு கட்டா பணம் வாங்கறாங்க. . ஆனா படிச்சதுக்கு சரியான வேலை வாய்ப்புகளும் இல்லை. Employment Office இல் மரியாதையும் இல்லை.


Sivagiri
ஜூன் 27, 2025 13:14

வர்றவனை எல்லாம் இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து . . . 100 க்கு 99.99 - அடுத்து பாஸ் ஆனவனும் இன்ஜினியர் என்று சொல்றான் . . . 35 மார்க் எடுத்து பாஸ் ஆனவனும் இன்ஜினியர் ஆகின்றான் . . .ரெண்டு பேருமே முழுக்கை சட்டை ஷூ போட்டுக்கிட்டு , வியர்வை இல்லாமல் வேலைதான் பார்க்கணும்னு போராடறான் . . . கிடைக்கலைன்னா , போதையில் பாதைக்கு போயிற்றான் . டெலிவரி பாய் ஆயிட்றான் . . . தகுதி தேர்வு வைத்து , என்பதுக்கு மேல் உள்ளவன் இன்ஜினியரிங் காலேஜ் , அறுபதுக்கு மேல் பாலிடெக்னீக் , அறுபதுக்கு கீழ் ஐடிஐ - என்று ஸ்லாப் போட்டு அனுப்பினால் அவனவன் திறமைக்கு ஏற்ற வேலை தானாகவே பார்க்க ஆரம்பிச்சிடுவான் . .. அப்பறம் அவனவன் திறமை , அனுபவத்தின் மூலமா , பெரிய ரேஞ்சுக்கு போறவன் போயிக்கிடுவான் . . ,


Yasararafath
ஜூன் 27, 2025 12:50

அரசு இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.


theruvasagan
ஜூன் 27, 2025 12:25

தொழில் என்றால் திராவிட மண்ணில் சாராய உற்பத்தி சினிமா தயாரிப்பு டிவி சேனல் நடத்துவது போன்ற கனரகத் தொழில்களுக்குத்தான் முக்கியத்துவம். அதற்குத் தேவையான கல்வி கிடைத்தால் போதும்.


மூர்க்கன்
ஜூலை 01, 2025 13:01

கல்விதான் ஆக சிறந்த செல்வம்.


சமீபத்திய செய்தி