உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., வட மாவட்டங்களில் வீக்: உளவுத்துறை அறிக்கை

தி.மு.க., வட மாவட்டங்களில் வீக்: உளவுத்துறை அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., அரசு மீது, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட வட மாவட்டங்களில், கடும் அதிருப்தி இருப்பது, உளவுத்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: உளவுத்துறை சார்பில், கடந்த ஒரு மாதமாக, மாவட்ட வாரியாக ரகசிய சர்வே எடுத்தனர். அதில், வட மாவட்டங்களில், தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரிந்தது. தென் மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு, அதீத முக்கியத்துவம் கொடுத்த ஆட்சி மேலிடம், வட மாவட்டங்களை கண்டுகொள்ளாததே இதற்கு காரணம். குறிப்பாக, வேலுார் மாவட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி., கதிர் ஆனந்த் பதவியில் இருந்தும், எதுவுமே செய்யவில்லை என கடுமையான அதிருப்தி உள்ளது. அங்கிருக்கும் வன்னியர் சமூகம் மத்தியில் அ.தி.மு.க கூட்டணியும், தலித் சமூகத்துக்கிடையே த.வெ.க.,வும் வளர்ந்து வருவதால், தி.மு.க., கடுமையான பின்னடைவை சந்திக்கிறது. அதேபோல் தான், ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீதான அதிருப்தி, தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளது. குறிப்பாக, தி.மு.க.,வினர் நடத்தும் கல் குவாரிகளால், பாதிக்கப்படும் கிராமத்தினர், மொத்தமாக அரசுக்கு எதிராக மாறி உள்ளனர். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தால், தி.மு.க., நிர்வாகிகளே தலைமைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இம்மூன்று மாவட்டங்களில், அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் அதிருப்தி திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என அண்டை மாவட்ட மக்களிடமும் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என, மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். வட மாவட்டங்களில் இருக்கும் அதிருப்தியை சரி செய்ய, கூட்டணி கட்சிகளின் வலிமையும் தி.மு.க.,வுக்கு கைகொடுக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் செயல்பாடும், தி.மு.க.,வையே பாதிக்கிறது. கடந்த 2021ல் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த வட மாவட்டங்கள், 'வீக்' ஆகிவிட்டதால், உளவுத் துறையின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

S.V.Srinivasan
பிப் 03, 2026 09:37

2026 ஏப்ரல் மாசத்துக்கு அப்புறம் தெரிஞ்சுடும் தி மு க தமிழ் நாடு பூராவும் வீக் என்று. ஹி ஹி


theruvasagan
பிப் 02, 2026 22:31

படம் படு டெர்ரரா இருக்கே. இதயம் பலவீனமாக இருக்கறவங்க பார்த்தா அவ்ளோதான்.


Yaro Oruvan
பிப் 02, 2026 18:04

வட மாவட்டத்துல வீக் ... தென் மாவட்டங்கள்ல - ரொம்ப ரொம்ப வீக்


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 02, 2026 17:31

எல்லா மாவட்டத்திலும் வீக்..திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தில் மக்கள் மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சிக்காரர்களே இல்லை..


ஆருயிர்த்தோன்
பிப் 02, 2026 16:54

வேற போட்டோவே கிடைக்கலையா எடிட்டர் சார்...


சந்திரன்
பிப் 02, 2026 19:19

இதே போட்டோவை போடுங்க ஒரு உபி அலறி ஓடிடும்


பாரத புதல்வன்
பிப் 02, 2026 14:13

என்ன கொடுமை சார் இது!


aru
பிப் 02, 2026 13:00

எல்லா மாவட்டத்திலும் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்...தென் மாவட்டத்துக்கும், கலங்கும் என்ன செய்தார்கள்...ஏர்போர்ட் கூட ரெடியாகவில்லை.. மது,கஞ்ச, வரி, பெண்கள் ,குழந்தைகள் பாதுகாப்பு, நீட், கடும் அதிருப்தி


Barathi
பிப் 02, 2026 12:53

வாக்காள மக்களே, ஒரு தர்ம நியாயம் வேண்டாமா? 2000 ஓவா வாங்கிகிட்டு தொகுதிக்கும் செய்யணும்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?


Barathi
பிப் 02, 2026 12:47

மரம் வெட்டி தலைவரும் சூட்கேஸ் அண்ணியாரும் எக்ஸ்ட்ரா பெட்டிகள் டிமாண்ட் பண்ணுவார்கள்


SJRR
பிப் 02, 2026 12:03

வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன் கதிர் ஆனந்த் எதுவுமே செய்யவில்லை என்று கூறக்கூடாது. அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் எல்லாம் அவர்களுக்கு செய்துகொண்டார்கள். ஆகவே அவர்களுக்கு ஒட்டு போட்டோமா அமைதியாக இருந்தோமா என்று இருக்கவேண்டும். 2026ல் ஆவது சிந்தியுங்கள்


முக்கிய வீடியோ